இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?

8/9/2025 2:18:54 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கிடையே மண்ணுக்கு அடியில் சிக்கியவர்களில் 19 பேர் பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மழை நீடித்து வருகின்ற நிலையில் மீட்பு பணி இன்றும் தீவிரமாக நடந்து வருகிறது. கேரள மாநிலம் மூணாறு அருகே பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கி 80க்கும் மேற்பட்ட தமிழக தோட்டத்தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். கடந்த 2 நாளாக போலீஸ், தீயணைப்புப்படை, வனத்துறை, தேசிய பேரிடர் மீட்புப்படையினர் பொது மக்களின் உதவியுடன் 12 பேரை உயிருடனும், 26 பேரை சடலமாகவும் மீட்டு உள்ளனர். 26 பேர் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பிறகு அருகில் உள்ள மைதானத்தில் தோண்டப்பட்ட 3 குழிகளில் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டது. நேற்று கிடைத்த உடல்கள் விஜிலா (47), குட்டிராஜ் (48), பவன்தா ய்(52), சண்முக ஐயர் (58), மணிகண்டன் (20), தீபக் (18), பிரபா (55), பாரதிராஜா (35) எனவும், நேற்று முன்தினம் கிடைத்த உடல் சரோஜா (58) எனவும் தெரியவந்துள்ளது. இது தவிர மண்ணுக்கு அடியில் 40க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அவர்களை மீட்கும் பணி 3வது நாளாக இன்று காலையில் தொடங்கியது. இந்த மீட்பு பணியில் சுமார் 200 பேர் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை ஒருவரது உடல் கிடைத்தது. இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்து உள்ளது. மீட்கப்பட்ட உடல் ராஜமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே இன்று காலையும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணியில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மீட்புப்படையினர் தங்களது பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள அமைச்சர்கள் சந்திரசேகரன், மணி ஆகியோர் மூணாறில் முகாமிட்டு மீட்புப்பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே மண்ணுக்கு அடியில் சிக்கியவர்களில் 19 பேர் பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்து உள்ளது. மாணவர்களின் நிலை என்ன? என்பது குறித்து உடனடியாக தகவல் இல்லை. இதற்கிடையே மீட்புப்பணிகளுக்காக திருவனந்தபுரத்தில் இருந்து நவீன உபகரணங்களுடன் தீயணைப்புப்படையினர் விரைந்துள்ளனர். நிலச்சரிவு நடந்த இடத்தை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் இன்று பார்வையிட்டார்.

நிலச்சரிவு நடந்தபோது வீடுகளில் 78 பேர் இருந்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிலாளர்களின் உறவினர்கள் சிலர் தமிழகத்தில் இருந்து வந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீடுகளில் 83 ேபர் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே 45 ேபர் மண்ணுக்கடியில் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட சோலை வனப்பகுதியில்தான் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று வனத்துறை கருதுகிறது. இந்த நிலச்சரிவில் வனக்காவலர்களான மணிகண்டன், அச்சுதன், ராஜா, டிரைவர்களான கணேசன், மயில்சாமி ஆகியோர் காணாமல் போய் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர வனத்துறை பெண் ஊழியரான ரேகா என்பவரும் காணாமல் போயிருந்தார். அவரது உடல் பின்னர் கிடைத்தது. ராஜமலை பகுதியில் உள்ள மேலும் 2 இடங்களில் தொழிலாளர்களின் உடல்கள் புதைந்து இருக்கலாம்? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டும் பணி இன்று காலை தொடங்கியது.

மேலும் சில
  • குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை



  • 28 ஆண்டுக்கு முன் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை: வலுவான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் அறிவிப்பு



  • சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்?



  • கொரோனா ஊரடங்கு நீடிக்கும் நிலையில் இன்று 5ம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு?... சினிமா தியேட்டர், மண்டபங்கள் திறக்க வாய்ப்பு



  • உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்த நிலையில் நிலம் கையகப்படுத்துதல் வழக்கில் முக்கிய திருப்பம்: புதிய கேள்விகளை எழுப்பி மீண்டும் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்



  • வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு



  • வேளாண் மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் இருந்து விலகியது சிரோன்மணி; 22 ஆண்டுகால உறவு முறிந்ததாக மாஜி அமைச்சர் அறிவிப்பு



  • உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்



  • போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்: அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு



  • பாஜக கூட்டணிக்கு வந்த மாஜி முதல்வருக்கு பரிசு மன்ஜிக்கு ‘இசட் பிளஸ்’ பஸ்வானுக்கு ‘இசட்’: பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணியில் சலசலப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]