இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நவம்பர் வரை ரேஷன் அரிசி இலவசம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

8/6/2025 2:38:04 PM
வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

திண்டுக்கல்: ‘‘ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை பொதுமக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படும்’’ என  திண்டுக்கல்லில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.8.69 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.8.88 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார். மேலும் 3,500 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் கொரோனாவை தடுக்க தேவையான அனைத்து  நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த நோயை கட்டுப்படுத்த முடியாது. இந்த நோயால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டாலும், அனைவரையும் காப்பாற்றக் கூடிய அளவுக்கு சிகிச்சை வசதிகள் தமிழகத்தில் உள்ளன. மக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. நோய் தொற்று ஏற்பட்ட பின்னரும் கவனக்குறைவாக இருந்தால், அபாய கட்டத்தை எட்ட வேண்டிய நிலை ஏற்படும். மக்களாகிய நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஊரடங்கை எதிர்கொள்ளும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவைகளும் ரேஷன் கடைகள் மூலம் கடந்த 4 மாதங்களாக வழங்கப்பட்டு வருகின்றன.

வரும் நவம்பர் வரை கார்டுதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படும். விளை பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்ல எந்த தடையும் கிடையாது. காய்கறிகள் உள்ளிட்ட அன்றாட அத்தியாவசியப் பொருட்களை எடுத்து செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.ரூ.10 கோடி மதிப்பில் இஸ்ரேல் உடன் ஒப்பந்த திட்டத்தில் தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு நாற்றங்கால்கள் வழங்கப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி துறை, பொதுப்பணித் துறை சார்பில் 500க்கும் மேற்பட்ட பண்ணைக் குட்டைகள், 400க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

முருக பெருமான் எழுந்தருளியுள்ள மாவட்டம் இது. திண்டுக்கல் என்றாலே பூட்டுதான் நினைவுக்கு வரும். மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் நூற்பாலைகள் உள்ளன. அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். உலக முதலீட்டாளர் திட்டத்தில் இம்மாவட்டத்திற்கு பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அகரம் பகுதியில் பருத்தி நூல் மற்றும் ஆடை உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. குடி மராமத்து திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு உட்பட பல்வேறு திட்டங்கள் இம்மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தேனி மாவட்டம் கும்பக்கரையில் இருந்து அடுக்கம் வரை சாலை அமைக்கும் பணி விரைவில் முடிவடையும். இதன் மூலம் பெருமாள்மலை வழியாக கொடைக்கானலுக்கு மேலும் ஒரு சாலை அமைக்கப்படும். கும்பக்கரையில் இருந்து அடுக்கம், பெருமாள் மலை வழியாக ரூ.100 கோடியில் இந்த சாலை அமைக்கப்பட்டு, விரைவில் போக்குவரத்து துவக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் சில
  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



  • மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவே அக்டோபர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு; செங்கோட்டையன் பேட்டி



  • வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்; காஞ்சிபுரம் வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னேரிக்கரையில் பிரம்மாண்ட வரவேற்பு



  • அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் வேட்பாளர் பிரச்னை; இபிஎஸ்- ஓபிஎஸ் நாளை பலப்பரீட்சை: 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்பு ஆதரவாளர்கள் திரள்வதால் போலீஸ் குவிப்பு



  • 72 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் பாடகர் எஸ்பிபி உடல் அடக்கம்: தாமரைப்பாக்கத்தில் திரையுலகினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி



  • வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை மற்றும் புறநகரில் விவசாயிகள்: சாலை மறியல் - தீவிர போராட்டம்



  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை: செட் ஆகாது என்றால் கட்டாயம் அல்ல: தமிழக வேளாண் துறை அமைச்சர், செயலாளர் மீண்டும் உறுதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]