இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மத்திய அரசின் உத்தரவின்படி செப்டம்பருக்குள் ‘செமஸ்டர்’ தேர்வை நடத்த இயலாது; மனிதவள மேம்பாட்டு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

7/11/2025 2:23:56 PM
74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார் நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கொண்டாட்டம்; பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை..தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி பேச்சு

சென்னை: மத்திய அரசின் உத்தரவின்படி செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த இயலாது என்று மனிதவள மேம்பாட்டு துறைக்கு அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்வுகள் நடத்த இயலாது என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பெக்ரியாலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு பல்வேறு முறைகளை ஒருங்கிணைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது.  தமிழக அரசின் பல்வேறு திட்டங்களால் தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 49 சதவீதமாக உள்ளது. இதன் பயணமாக அதிக அளவிலான மாணவர்கள் பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இவற்றில் ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு கொரோனா பாதிப்பு காரணமாக நடத்த முடியவில்லை.

இந்நிலையில் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. ஆனால் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. பல மாணவர்கள் வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் வசித்துவருகின்றனர். மேலும் பல்வேறு காரணங்களால் ஆன்லைன் முறையில் நடத்த முடியாத சூழ்நிலையும் உள்ளது. தமிழகத்தில் உள்ள பல உயர்கல்வி நிறுவனங்களில் ெகாரோனா மையங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதில் அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. எனவே செப்டம்பர் மாதத்தில் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் வழங்க வேண்டும். செப்டம்பரில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • 74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார்



  • சென்னை கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர்



  • அதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டம்; 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர்...தேனி மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் திடீர் பரபரப்பு



  • அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?..அமைச்சர்கள் கடும் அதிருப்தி: உட்கட்சி சண்டையால் தொண்டர்கள் விரக்தி



  • தாயுள்ளம் கொண்ட தலைவர் கலைஞர் சட்டமாக்கிய சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தடையின்றி உடனே நடைமுறைப்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு; 3 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு



  • தங்கம் விலை 4வது நாளாக சரிவு; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,832 குறைந்தது..கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தது காரணமா?



  • கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள அதிமுக அரசை மக்கள் நம்பியிருக்காமல் சுய பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுங்கள்; மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்



  • 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் பாஸ்



  • தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]