இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

முகக்கவசம் அணியாதவர்களுக்கு கேரளாவில் ரூ10,000 அபராதம்

7/5/2025 2:44:07 PM
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக நோயாளிகளின் எண்ணிக்கை 100ஐ தாண்டிய நிலையில், நேற்று முன்தினம் முதன்முதலாக இது 200ஐ தாண்டியது. நேற்று 2வது நாளாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்தது. கேரளாவில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் 5,204 ஆக உள்ளது. இதற்கிடையே கேரளாவில் சமூக பரவல் தொடங்கி விட்டதாக இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு நிபந்தனைகளை மேலும் கடுமையாக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது.

கேரளாவில்தான் இந்தியாவிலேயே முதன்முதலாக கடந்த ஜனவரி 30ம் தேதி ெகாரோனா உறுதி செய்யப்பட்டது. இதன்பிறகு ேநாயாளிகளின் எண்ணிக்கை 1,000ஐ கடக்க 4 மாதங்கள் ஆயின. தற்போது கடந்த 4 நாட்களில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 1,000ஐ கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கேரளாவில் தொற்றுநோய் பரவல் சட்டம் அமலில் உள்ளது. தற்போது இதில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் வாகனங்களில் ெசல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அணியாவிடில் ரூ.10 ஆயிரம் வரை அபராதமும், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஒரேநேரத்தில் 25 பேருக்கு மேல் கூடக்கூடாது. கண்டிப்பாக கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும்.

பொது இடங்கள், நிகழ்ச்சிகளின் கலந்து கொள்பவர்கள் 6 அடி அகலம் இடைவெளி கடைபிடிக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூடக்கூடாது. மேலும் கிருமிநாசினி வைத்திருப்பதோடு, அனைவரும் முகக்கவசமும் அணிந்திருக்க வேண்டும். அரசியல் கட்சியினர், அமைப்பினர் அனுமதியில்லாமல் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது. போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் 6 அடி அகலம் இடைவெளி கடைபிடிக்க வேண்டும். 10 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். சாலைகள், நடைபாதை உட்பட பொது இடங்களில் எச்சில் உமிழக்கூடாது என்பன போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் சில
  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



  • ஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்; ரூ15 கோடிக்கு மேல் வரம்பின்றி செல்லும் குதிரை பேரம்: முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]