இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: முதல்வர் எடப்பாடியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும்

7/3/2025 2:40:40 PM
74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார் நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கொண்டாட்டம்; பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை..தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி பேச்சு

உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்

சென்னை: சாத்தான் குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடந்த 23ம் தேதி உயிரிழந்தனர். அவர்கள் உயிரிழப்புக்கு போலீசார் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. பிரச்சனை பூதாகரமாக வெடித்ததை அடுத்து சிபிசிஐடி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் இதுவரை போலீஸ் இன்ஸ்ெபக்டர் தர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார் முருகன், முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தினந்தோறும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தந்தை, மகன் உயிரிழந்த அடுத்த நாளே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை விடுத்தார். அதில் பென்னிக்ஸ் மூச்சுத்திணறித்தான் இறந்தார் என்றும், ஜெயராஜ் உடல் நலமில்லாமல் இறந்தார் என்றும் கூறியிருந்தார். முதல்வரின் அந்த அறிக்கை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் தாக்குதலில் இறந்தவர்களை எப்படி முதல்வர் எடப்பாடி இப்படி கூறலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் ராஜராஜன் இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறியிருப்பதாவது: முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கையில் தான் உள்துறை பொறுப்பு உள்ளது. அதன் கீழ் தான் சி.பி.சி.ஐ.டி. இயங்கி வருகிறது. அதனால், சாத்தான்குளம் வழக்கு விசாரணை முடியும் வரை, உள்துறை பொறுப்பில் அவர் இருக்கக்கூடாது. அவரிடம் இருந்து உள்துறை பொறுப்பை திருப்பி வாங்கப்பட வேண்டும். தந்தை, மகன் கொலை விவகாரத்தில் முதல்வர், அவர்கள் இயற்கை மரணம் தான் அடைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு அது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது. அதனால் இந்த விவகாரத்தில் இயற்கை மரணம் என்று தெரிவித்திருப்பது, குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கமாக உள்ளது. அதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முதல்வரிடம் விசாரண நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணக்கு வரும் என்று கூறப்படுகிறது.

மேலும் சில
  • 74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார்



  • சென்னை கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர்



  • அதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டம்; 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர்...தேனி மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் திடீர் பரபரப்பு



  • அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?..அமைச்சர்கள் கடும் அதிருப்தி: உட்கட்சி சண்டையால் தொண்டர்கள் விரக்தி



  • தாயுள்ளம் கொண்ட தலைவர் கலைஞர் சட்டமாக்கிய சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தடையின்றி உடனே நடைமுறைப்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு; 3 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு



  • தங்கம் விலை 4வது நாளாக சரிவு; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,832 குறைந்தது..கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தது காரணமா?



  • கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள அதிமுக அரசை மக்கள் நம்பியிருக்காமல் சுய பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுங்கள்; மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்



  • 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் பாஸ்



  • தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]