இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சாத்தான்குளத்தில் 2 வியாபாரிகள் கொலை சிசிடிவி கேமரா பதிவு காவலர் உள்பட 3 பேரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை

7/3/2025 2:37:41 PM
74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார் நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கொண்டாட்டம்; பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை..தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி பேச்சு

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகனான வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு நேரத்தை தாண்டி கடந்த மாதம் 19ம் தேதி இரவு கடைகளை திறந்து வைத்ததாக இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் சரமாரியாக தாக்கி கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். அங்கு அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர். வியாபாரிகள் இறந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் இரு காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார். இதில் கொலை வழக்கிற்கு பல ஆதாரங்கள் சிக்கின. ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சிறையில் அடைக்க மருத்துவச் சான்று வழங்கிய சாத்தான்குளம் அரசு டாக்டர் வினிலா, காவல் நிலைய எழுத்தர் பியூலா ஆகியோரிடம் நேற்று முன்தினம் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா ஆபரேட்டராக பணியாற்றிய காவலர் தாமஸ் பிரான்சிஸ் நேற்று மதியம் 2.45 மணிக்கு திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன், சிசிடிவி பதிவுகள் அழிந்தது எப்படி என்ற கோணத்தில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து காவல் நிலைய ஜீப் டிரைவர் ஜெயசேகர், காவலர் அழகுமாரி செல்வம் ஆகியோரிடம் நேற்று மாலை விசாரணை நடத்தினார். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தடயங்கள் அழிப்பு
சாத்தான்குளம் போலீசார் வியாபாரிகள் இருவரையும் தாக்கியதில் லத்தி, மேஜை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரத்தம் சொட்டியுள்ளது. இந்த ரத்தக்கறையை போலீசார் அழித்துள்ளனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய தற்காலிக தூய்மை பணியாளர் வேல்முருகன் என்பவரிடம், ரத்தக்கறைகள் சுத்தம் செய்யப்பட்டதா என மாஜிஸ்திரேட் நேற்று விசாரணை நடத்தினார். இவர் மாற்றுத்திறனாளி என்ற போதிலும் சைகை மூலம் பல்வேறு விஷயங்கள் குறித்து சாட்சியம் அளித்தார். அதை மாஜிஸ்திரேட் பதிவு செய்தார்.

மேலும் சில
  • 74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார்



  • சென்னை கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர்



  • அதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டம்; 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர்...தேனி மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் திடீர் பரபரப்பு



  • அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?..அமைச்சர்கள் கடும் அதிருப்தி: உட்கட்சி சண்டையால் தொண்டர்கள் விரக்தி



  • தாயுள்ளம் கொண்ட தலைவர் கலைஞர் சட்டமாக்கிய சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தடையின்றி உடனே நடைமுறைப்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு; 3 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு



  • தங்கம் விலை 4வது நாளாக சரிவு; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,832 குறைந்தது..கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தது காரணமா?



  • கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள அதிமுக அரசை மக்கள் நம்பியிருக்காமல் சுய பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுங்கள்; மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்



  • 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் பாஸ்



  • தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]