இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

போலீசார் தாக்கியதில் 2 வியாபாரி சாவு: மாவட்ட முதன்மை நீதிபதி விசாரணை

6/28/2020 2:41:59 PM
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்?

சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் ஊரடங்கு விதிமுறையை மீறி கடைகளை திறந்து வைத்ததாகக் கூறி போலீசார் இருவரையும் கடந்த 19ம்தேதி கைது செய்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்களை சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அங்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு 22ம் தேதி இரவில் பென்னிக்சும், 23ம் தேதி அதிகாலையில் ஜெயராஜூம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து இறந்தனர். போலீஸ் தாக்கியதால் வியாபாரிகள் இறந்த தகவல் தமிழகம் முழுவதும் வியாபாரிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தந்தை, மகன் சாவுக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

இதற்கிடையே மதுரை ஐகோர்ட் கிளை தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். நேற்று முன்தினம் மீண்டும் இந்த வழக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு வந்தது. இதில், ‘‘கோவில்பட்டி 1வது மாஜிஸ்திரேட் சாத்தான்குளத்திற்கு நேரில் சென்று அங்கு சாட்சிகளிடம் நேரடி விசாரணை நடத்தி, அதை பதிவு செய்ய வேண்டும். கோவில்பட்டி சிறை, சாத்தான்குளம் போலீஸ் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து பாதுகாக்க வேண்டும். இந்த வழக்கு வருகிற 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.’’ என்றனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி லோகேஸ்வரன், ஜெயராஜ் வீட்டுக்கு சென்று அவரது மனைவி, மகள்களிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் சாத்தான்குளம் நீதிமன்றம், போலீஸ் நிலையம், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் நடத்தி வந்த கடைகளையும் பார்வையிட்டார். ஐகோர்ட் உத்தரவின்பேரில் நேற்று கோவில்பட்டி குற்றவியல் நடுவர் எண் 1 மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தூத்துக்குடி குற்றவியல் மாஜிஸ்திரேட் ஹேமா ஆகியோர் கோவில்பட்டி சிறைக்கு சென்றனர். அங்கு தந்தை, மகன் சேர்க்கப்பட்டதற்கான ஆவணங்களை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்த சிறை கண்காணிப்பாளர் சங்கர், வார்டன்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மாலை வரை நடந்தது.

மேலும் சில
  • தங்கம் விலை மீண்டும் கிடு கிடு: ஒரே நாளில் பவுனுக்கு ரூ608 அதிகரிப்பு



  • கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு



  • நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை: மருத்துவ நிபுணர்களுடன் பிற்பகலில் ஆலோசனை



  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



  • மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவே அக்டோபர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு; செங்கோட்டையன் பேட்டி



  • வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்; காஞ்சிபுரம் வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னேரிக்கரையில் பிரம்மாண்ட வரவேற்பு



  • அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் வேட்பாளர் பிரச்னை; இபிஎஸ்- ஓபிஎஸ் நாளை பலப்பரீட்சை: 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்பு ஆதரவாளர்கள் திரள்வதால் போலீஸ் குவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]