இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சீனாவின் பிரபல சமூக வலைதளங்களில் பிரதமர் மோடியின் கருத்துக்கு தடை: எல்லை பிரச்னை தொடர்பான பதிவுகள் நீக்கம்

6/21/2020 2:20:46 PM
அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் மக்களை மிரட்டிய வெள்ளம்: 5 ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பீதி

புதுடெல்லி: சீனாவின் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி தொடர்பான அறிக்கை, கருத்து, செய்திகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய - சீன எல்லை பிரச்னை தொடர்பான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இந்திய - சீன எல்லையில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் சீன வீரர்கள், இரும்பு கம்பிகள், கற்கள் மூலம் இந்திய ராணுவத்தினரை தாக்கினர்.  இதில் தமிழக வீரர் பழனி உள்பட 20  பேர் உயிரிழந்தார்கள். இதன்பின்னர் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை. நமது நிலையையும் கைப்பற்றவில்லை. எல்லைக் கட்டுப்பாட்டுப்  பகுதியில் சீனாவின் நடவடிக்கை ஒட்டு மொத்த தேசத்தையும் காயப்படுத்தியுள்ளது. இந்திய வீரர்களின் தியாகம் வீண் போகாது. இந்த விவகாரத்தில் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்’ என்று பேசினார்.

இதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், ‘பிரதமர் மோடி பேசியது தவறாக பரப்பப்பட்டு வருகிறது. இந்திய ராணுவத்தின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது’ என்று நேற்று பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், சீன அரசாங்கத்தின் கட்டுப்பாடு மற்றும் தணிக்கைக்கு பெயர் பெற்ற சீன சமூக ஊடகங்கள், இப்போது பிரதமர் மோடியின் பேச்சையும், எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய அதிகாரிகள் பேசிய கருத்துகளையும், உத்தியோகபூர்வ அறிக்கைகளையும் நீக்கியுள்ளன. இந்திய - சீனா பதற்றம் தொடர்பான எல்லை நிலைமை குறித்த செய்திகளை ‘வி-சாட்’ என்ற சமூக வலைதளத்தில் (டுவிட்டர், பேஸ்புக் போன்று) அதன் பயனர்கள் அணுக முடியாததாகிவிட்டது. 

அந்த சமூக வலைதளமான ‘WeChat’-இல் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், ‘இந்த (எல்லை பிரச்னை) உள்ளடக்கம் விதிமுறைகளை மீறுவதால் அதை உங்களால் பார்க்க முடியாது’ என்று, இந்தியா தரப்பு தகவல்களை நீக்கிவிட்டன. கடந்த 2015ம் ஆண்டில் தனது சீன பயணத்திற்கு முன்னதாக, பிரதமர் மோடி சீனாவின் ‘வெய்போ’ சமூக வலைதளத்தில் ஒரு கணக்கைத் ெதாடங்கினார். இது இந்தியாவில் புழக்கத்தில் உள்ள டுவிட்டருக்கு சமமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், சீனாவுடனான எல்லை பதட்டங்கள் தொடர்பான எந்த உள்ளடக்கத்தையும் இந்த கணக்கு பிரதமர் மோடி வெளியிடவில்லை. மேலும், ‘வெய்போ’ சமூக வலைதளமும் இருநாட்டு எல்லை பிரச்னை தொடர்பான தகவல்களை வெளியிடாமல் தவிர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசிய 4 பேர் குழுவிடம் விவசாயிகளுக்கு நீதி கிடைக்காது: காங். செய்தி தொடர்பாளர் காட்டம்



  • புனேவில் இருந்து முதல் கட்டமாக 5.56 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து சென்னை வந்தது: இன்று மாலை மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு



  • பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்; ‘அல்வா’ நிகழ்ச்சி, பிரிண்ட் ஆவணம் கிடையாது: மத்திய நிதியமைச்சக வட்டாரம் தகவல்



  • டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 15ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்: ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட உள்ளதாக அறிவிப்பு



  • 15ம் தேதி 9ம் கட்ட பேச்சுவார்த்தை வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றால் மட்டுமே வீடு திரும்புவோம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு



  • கூட்டணி தர்மத்தை மீறலாமா? சிவசேனா நிர்வாகியை வளைக்கும் சரத்பவார் : டுவிட்டை போட்டுவிட்டு நீக்கியதால் பரபரப்பு



  • விவசாயிகள் டிராக்டர் பேரணியால் திணறியது டெல்லி



  • ரூ. 971 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்றம் கட்ட அனுமதி: சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகளில் ஒருவர் மாறுபட்ட தீர்ப்பு



  • கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் கேரளா உட்பட 4 மாநிலங்களில் பறவை காய்ச்சல்... தமிழகத்தில் கோழிப்பண்ணைகள் கண்காணிப்பு



  • டாக்டர் கணவனிடமிருந்து பிரிந்ததால் பெண் மருத்துவர் மகனுடன் தற்கொலை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]