இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

திருமுல்லைவாயலில் இன்று காலை மீன் வியாபாரி சரமாரி வெட்டி படுகொலை: 2 நண்பர்களுக்கு வலை வீச்சு

6/5/2025 2:50:21 PM
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

ஆவடி: திருமுல்லைவாயலில் இன்று காலை ஒரு மீன் வியாபாரியை ஓட ஓட விரட்டி, அவரது 2 நண்பர்களும் சரமாரியாக வெட்டி கொன்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வருகின்றனர். ஆவடி அருகே திருமுல்லைவாயல், அன்னை அஞ்சுகம் நகர், பாட்டாளி நகரை சேர்ந்தவர் பாண்டியன் (31). மீன் வியாபாரி. இவருக்கு மனைவி உஷா (25) மற்றும் மகன் உள்ளனர். இன்று காலை 6.30 மணியளவில் பாண்டியன் வீட்டுக்கு 2 நண்பர்கள் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் பாண்டியனை அழைத்து கொண்டு வீட்டிலிருந்து நடந்து சென்றுள்ளனர். அதே பகுதியில் 2-வது குறுக்கு தெருவில் சென்றபோது பாண்டியனிடம் 2 நண்பர்களும் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பாண்டியனுக்கும் நண்பர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

பின்னர் பாண்டியனை இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டினர். அவர்களிடம் இருந்து பாண்டியன் தப்பி ஓடினார். அவரை ஓட ஓட விரட்டி 2 நண்பர்களும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பாண்டியனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதைத் தொடர்ந்து 2 நண்பர்களும் அரிவாளுடன் தப்பி ஓடிவிட்டனர்.இதுகுறித்து தகவலறிந்ததும் திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். பாண்டியனின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்தை அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன் பாண்டியனுக்கும் அதே பகுதியை சேர்ந்த 2 நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இத்தகராறு காரணமாக வீட்டில் இருந்த பாண்டியனை வெளியே அழைத்து சென்று அவர்கள் இருவரும் வெட்டி கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.இதைத் தொடர்ந்து 2 தனிப்படை அமைத்து, தலைமறைவான 2 நண்பர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



  • ‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்



  • கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது



  • உடல்நல கோளாறை சரி செய்வதாக கூறி தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி



  • கயத்தாறு அருகே ஆடு விவகாரத்தில் மோதல்: தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேர் அதிரடி கைது



  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



  • திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கத்தில் தொடர் பைக் திருட்டு 2 சிறுவர்கள் கைது



  • முகப்பேரில் வீடு உடைத்து 18 பவுன் நகை கொள்ளை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]