கஞ்சா விற்ற வாலிபர் கைது
3/18/2020 3:16:09 PM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கம், ஜெ.ஜெ நகர் பகுதியில் ஒரு வாலிபர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக நேற்றிரவு ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு எஸ்ஐ வரதராஜன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று மாறுவேடத்தில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒரு வாலிபரிடம் மாறுவேடத்தில் இருந்த ஒரு போலீஸ்காரர் பணம் கொடுத்து கஞ்சா கேட்டார். பணத்தை பெற்றுக்கொண்டு வாலிபர் கஞ்சா பொட்டலங்களை வழங்கியபோது, அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் பாலவாக்கம், ஜெ.ஜெ நகரை சேர்ந்த மணி (19) என்பதும், அவர் ஆந்திர மாநிலத்தில் கஞ்சா கடத்தி வந்து, ஊத்துக்கோட்டை பகுதிகளில் விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.