இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஊராட்சிகளில் கஜானா காலி: பணியாளர்களுக்கு சம்பளம் கட்

3/17/2020 2:28:18 PM
காஞ்சி, திருவள்ளூர், செங்கை மாவட்டத்தில் பரவலாக மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாலாற்றில் வெள்ள பெருக்கு:.கரையோர மக்களுக்கு எச்சரிக்கை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 5 வாக்குறுதி: 2070-க்குள் ‘பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு’ இலக்கு: கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

திருச்சி: தமிழ்நாட்டில் 385 ஊராட்சி ஒன்றியங்களும், அவற்றில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளும் உள்ளன. கிராமஊராட்சிகளில் ஊராட்சி பொதுநிதி, மின்சாரம் மற்றும் குடிநீர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், ஊராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்டவைகளுக்கான வங்கி கணக்குகள் தனித்தனியாக உள்ளன. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புதிட்டம், சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம் ஆகியவற்றிற்கான கணக்குகள் தற்போது நடைமுறையில் இல்லை. மேலும், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கான கணக்கு ஊரக வீடுகட்டும் திட்டத்திற்கான கணக்காக மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதிக்கு பின்னர் உள்ளாட்சி பிரதநிதிகளின் பதவிக்காலம் முடிந்த பின் தனி அலுவலரின் கட்டுப்பாட்டில் ஊராட்சிகள் செயல்பட்டபோது, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றிய ஆணையர் கையொப்பம் பெறப்பட்டு கிராம ஊராட்சிகளின் வங்கி கணக்குகள் கையாளப்பட்டது. கடந்த டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்று கொண்டனர். அதனையடுத்து தற்போது கிராம ஊராட்சிகள் தனி அலுவலரின் கட்டுப்பாட்டில் இருந்து உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

கிராம ஊராட்சிகளுக்கு வீட்டுவரி, தொழில்வரி, கடைகள் மீது விதிக்கப்படும் வரி, குடிநீர் குழாய் இணைப்பு கட்டணம், நில வரியிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு, சொத்துரிமை மாற்றத்தின் மீதான வரியிலிருந்து ஒரு பங்கு உள்ளிட்டவை மூலம் வருவாய் கிடைக்கிறது. இவைகளால் கிடைக்கும் வருவாயை கொண்டு கிராம ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளை நிர்வகிக்க முடியாத நிலை உள்ளது. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியங்களே கிராம ஊராட்சியின் முதன்மையான வருவாயாகும். கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என கடந்த திமுக ஆட்சியில் கிராம ஊராட்சிகளுக்கு கிராம பொது நிதி அதிக அளவில் வழங்கப்பட்டது. இதன் மூலம் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பணிகள் மேற்கொண்டது போக ஊராட்சி பொது நிதியில் இருந்த மீதத்தொகையில் சிறுசாலைகள் மற்றும் சிறு பாலங்கள் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய ஆட்சியில் 2019-2020ம் நிதி ஆண்டின் தொடக்க மாதமான கடந்த ஏப்ரல் மாதம் முதல் கிராம ஊராட்சிகளின் ஊராட்சிப் பொது நிதிக்கு மொத்த ஊராட்சிகளில் சுமார் இருபது சதவீத ஊராட்சிகளுக்கு நிதி வழங்கப்படவே இல்லை. மேலும் இருபது சதவீத ஊராட்சிகளுக்கு மாதம் ஒன்றுக்கு இரண்டாயிரத்திற்கு குறைவாகவே பெயரளவிலேயே நிதி வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 60% சதவீத ஊராட்சிகளுக்கும் போதிய நிதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், புதிதாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொறுப்பேற்றும் கிராம ஊராட்சிகளுக்கு பொதுநிதி வழங்குவதில் எவ்வித மாற்றமும் இல்லை. இதன் காரணமாக கிராம ஊராட்சியின் பொது நிதி மூலம் மேற்கொள்ளப்படும் குடிநீர் பராமரிப்பு, டெங்குகொசு ஒழிப்பு உள்ளிட்ட சுகாதாரப்பணி பணிகள், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் முடங்கியுள்ளது.

மேலும், கிராம ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியவர்களுக்கு ஊதியம் வழங்கக்கூடிய பணியாளர் ஊதிய கணக்கு எண் ஏழு விற்கும் தற்போது உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதன் காரணமாக கிராம ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 157, நாகை மாவட்டத்தில் 434, திருவாரூர் மாவட்டத்தில் 430, தஞ்சை மாவட்டத்தில் 589, பெரம்பலூர் மாவட்டத்தில் 121, அரியலூர் மாவட்டத்தில் 210, புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 ஊராட்சிகள், திருச்சி மாவட்டத்தில் 404 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகள் அனைத்தும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • காஞ்சி, திருவள்ளூர், செங்கை மாவட்டத்தில் பரவலாக மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாலாற்றில் வெள்ள பெருக்கு:.கரையோர மக்களுக்கு எச்சரிக்கை



  • 5ம் தேதி வரை கனமழை தொடரும்: 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் கலெக்டர்கள் உத்தரவு



  • தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவு அருகே மழையால் வேருடன் மரம் விழுந்ததில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் உடல் நசுங்கி பலி



  • இலங்கை தமிழர்களுக்காக 3,510 குடியிருப்புகள் கட்டும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்



  • கோயம்பேடு, வேளச்சேரியில் புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி



  • பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வர்த்தக காஸ் சிலிண்டர் ரூ268.50 அதிகரிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்



  • சென்னையில் வெளுத்து வாங்கியது: தீபாவளி வரை கனமழை தொடரும்



  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு



  • 586 நாட்களுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவியர் உற்சாகம்



  • பெட்ரோல், டீசல் விலை இன்றும் 30, 34 காசு உயர்வு: ஒரு மாதத்தில் பெட்ரோல் ரூ6.46 அதிகரிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]