இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு இந்திய வீரர்கள் 9 பேர் தகுதி

3/12/2025 3:32:34 PM
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

அம்மான்: ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்த ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை பிளே-ஆப் சுற்றில் 63 கிலோ எடைப்பிரிவில், ஆஸி. வீரர் கேரிசன் கார்சைடை இந்திய வீரர் மனிஷ் கவுசிக் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். இந்த ஆண்டு ஒலிம்பிக் குத்துச்சண்டையில் அதிகபட்ச எண்ணிக்கையாக இந்திய வீரர்கள், வீராங்கனைகள் 9 பேர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மானில் ஆசிய தகுதி சுற்று பிளே-ஆப் பிரிவின் கடைசி சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. இதில் 63 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஹரியானா மாநிலத்ைத சேர்ந்த மனிஷ் கவுசிக்கும், ஆஸ்திரேலிய வீரர் கேரிசன் கார்சைடும் மோதினர். கடந்த 2018ம் ஆண்டு காமன்வெல்த் குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் ஏற்கனவே இருவரும் மோதியுள்ளனர். அதில் மனிஷ் கவுசிக் தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கத்துடன் நாடு திரும்பினார். இந்நிலையில் நேற்றைய போட்டி இரு நாட்டு ரசிகர்களிடையேயும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மனிஷ் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் இப்போட்டியில் எளிதாக வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் மனிஷ் கவுசிக், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் அதிகபட்சமாக இந்திய வீரர்கள், வீராங்கனைகள் 8 பேர் பங்கேற்றனர். தற்போது அந்த சாதனையை முறியடித்து, 9 பேர் டோக்கியோ ஒலிம்பிக்கில் களம் இறங்க உள்ளனர். இந்திய வீராங்கனைகள் 51 கிலோ எடைப்பிரிவில் மேரி கோம், 60 கிலோ எடைப்பிரிவில் சிம்ரன்ஜித் கவுர், 69 கிலோ எடைப்பிரிவில் லவ்லினா போர்கோஹைன் மற்றும் 75 கிலோ எடைப்பிரிவில் பூஜா ராணி ஆகியோர் டோக்கியோ செல்ல உள்ளனர். வீரர்கள் 52 கிலோ எடைப்பிரிவில் அமித் பன்ஹால், 63 கிலோ எடைப்பிரிவில் மனிஷ் கவுசிக், 69 கிலோ எடைப்பிரிவில் விகாஸ் கிருஷ்ணன், 75 கிலோ எடைப்பிரிவில் ஆஷிஷ் குமார் மற்றும் 91 கிலோ எடைப்பிரிவில் சதீஷ்குமார் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.

மேலும் சில
  • அப்பாடா....எனக்கு கொரோனா இல்லை: கேன் ரிச்சர்ட்சன் மகிழ்ச்சி



  • விளையாட்டு உலகை முடக்கியது கொரோனா: பிரெஞ்ச் ஓபன் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு



  • ஸ்டெம்புகளுக்கு பின்னால்.... தோனி அணியின் மிகப்பெரிய சொத்து: வாசிம் ஜாபர் பேட்டி



  • கிரிக்கெட் விளையாட்டை காட்டிலும் வாழ்க்கையில நிறைய விஷயம் இருக்கு..! பாகிஸ்தானில் இருந்து ஆஸி. வீரர் ஓட்டம்



  • இத்தாலி முழுவதும் மூடப்பட்ட நிலையில் சென்னை திரும்பினார் வாள்வீச்சு வீராங்கனை



  • இந்தியாவில் கங்குலியை பாருங்க என்னமா உசரத்துக்கு வந்துட்டார்..! பாக். வாரியத்தை வறுத்தெடுக்கும் அக்தர்



  • கொரோனா தொற்றை தவிர்க்க கைகளை கழுவுவது எப்படி?.... சச்சின் வெளியிட்ட வீடியோ வைரல்



  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிபோனது ‘கோபா’, ‘யூரோ’



  • ஒலிம்பிக்கை ஓராண்டுக்கு ஒத்திவையுங்க..! அமெரிக்க அதிபர் வேண்டுகோள்



  • கொரோனா பீதி: சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அடுத்தடுத்து ரத்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]