இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் மரணம்

2/28/2020 2:27:58 PM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம் மார்ச் 1ம் தேதி முதல் பத்திர எழுத்தர்கள் ஆவண தயாரிப்புக்கு கட்டண ரசீது கட்டாயம்

வேலூர்: குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதையறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக பணியாற்றி வந்தவர் எஸ்.காத்தவராயன்(60). இவர் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் நடந்த குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு 1 லட்சத்து 61 ஆயிரத்து 37 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். தொடர்ந்து தொகுதி பணியாற்றி வந்த இவர் சளி, இருமல், நீரிழிவு நோய் பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார். மேலும் காத்தவராயன் கடந்த சில மாதங்களாக இருதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால், கடந்த 4ம்தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த காத்தவராயனின் உடல்நிலை நேற்று இரவு மேலும் கவலைக்கிடமானது. இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இதுபற்றி தகவலறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் கட்சி நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இறந்த காத்தவராயனுக்கு திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் பெயர் சிவலிங்கம்-பொன்னம்மாள். பெரியதம்பி, சின்னதம்பி என்ற 2 அண்ணன்கள், ஜெய்சங்கர் என்ற தம்பி, சகோதரி செல்வி என 4 பேர் உடன் பிறந்தவர்கள். எஸ்.எஸ்.எல்.சி மட்டுமே படித்த காத்தவராயன் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.
திராவிட இயக்க கொள்கைகளின் மீதான பற்று காரணமாக கடந்த 1980ம் ஆண்டு திமுக அடிப்படை உறுப்பினராக ஆனார். 1984ம் ஆண்டு பேரணாம்பட்டு நகர இளைஞரணி அமைப்பாளராகவும், 1987ம் ஆண்டு பேரணாம்பட்டு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்தார். தொடர்ந்து 1996ல் மாவட்ட பிரதிநிதியாகவும், 2013ல் வேலூர் மத்திய மாவட்ட திமுக துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.

இதற்கிடையில் 2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு பேரணாம்பட்டு நகராட்சி தலைவராக பொறுப்பேற்றார். 2016ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்த அவர், இடையில் சட்டமன்ற தேர்தல் காலங்களில் போட்டியிட தலைமையிடம் வாய்ப்பு கேட்டு வந்தார். தொடர்ந்து 8 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வந்த அவருக்கு தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் குடியாத்தம் தனித்தொகுதியில் 2019ல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதற்கேற்ப 27 ஆயிரத்து 841 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை பின்னுக்குதள்ளி வெற்றிபெற்றார்.

அதேபோல் திமுக அறிவிக்கும் அனைத்து போராட்டங்களிலும் முன்னணியில் இருந்து கலந்து கொண்டவர். கடந்த 1986ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல போராட்டங்களுக்கு பின்னர் குடியாத்தம் இடைத்தேர்தலில் வாய்ப்பு கிடைக்கப்பெற்று 9 மாத காலமே எம்எல்ஏவாக பதவி வகித்தார். சென்னை திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி. சாமி நேற்று மரணமடைந்த நிலையில் மற்றொரு திமுக எம்எல்ஏவான காத்தவராயன் இன்று மரணமடைந்துள்ளார்.

மேலும் சில
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்



  • மார்ச் 1ம் தேதி முதல் பத்திர எழுத்தர்கள் ஆவண தயாரிப்புக்கு கட்டண ரசீது கட்டாயம்



  • ஸ்டிரைக்கில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் டிரான்ஸ்பர் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி



  • ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா?



  • காஞ்சிபுரம் சரவண பவன் உணவக மேலாளர் தற்கொலை: சம்பள பிரச்னையா? விசாரணை



  • காசோலை மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜ் நேரில் ஆஜராக சம்மன்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு



  • ஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது



  • பொள்ளாச்சி அருகே கூட்டுறவு வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுன் தப்பியது: ஜன்னல் கம்பியை வளைத்து புகுந்தனர்



  • சத்தியமங்கலம் அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு



  • மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினாவில் பாதை: விரைவில் பணிகள் தொடக்கம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]