இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காஞ்சிபுரம் சரவண பவன் உணவக மேலாளர் தற்கொலை: சம்பள பிரச்னையா? விசாரணை

2/27/2020 3:47:58 PM
ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா? சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சரவண பவன் உணவகத்தில் மேலாளர் தற்கொலை செய்து கொண்டார். சம்பள பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் நடந்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் பழனியப்பன் (49). காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள சரவணபவன் ஓட்டல் கிளையின் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இது தவிர, காஞ்சிபுரம் நெல்லுக்கார தெரு, வெள்ைளக்கேட் பகுதியில் உள்ள சரவணபவன் கிளைகளுக்கும் மேலாளராக இருந்து வந்தார். காஞ்சிபுரத்தில், சரவணபவன் ஓட்டல் நிர்வாகம் வழங்கிய வீட்டில் மனைவி, மகன், மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், பழனியப்பனின் மகன் படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்து வருகிறார். மகளுக்கு திருமணமாகவில்லை.

இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்தார் பழனியப்பன். மேலும் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி, பழனியப்பனிடம் ஊழியர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அவர், நிர்வாகத்துக்கு தெரிவித்தார். அதற்கு பிறகும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது பற்றி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல், உணவக ஊழியர்கள் 50 பேருக்கு முன்பணமாக தலா ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கினார் பழனியப்பன். இது பற்றி நிர்வாகத்துக்கு தெரியவர, பழனியப்பனை கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த பழனியப்பன், நேற்றிரவு வழக்கம் போல வேலை முடிந்ததும் வீட்டுக்கு சென்றார். மனைவி, மகன், மகள் தூங்கி விட்டனர்.

மனம் உடைந்த பழனியப்பன், விரக்தியின் உச்சத்துக்கே சென்றார். வீட்டின் தனி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் மனைவி, மகன், மகள் மற்றும் உறவினர்கள் கண்விழித்து பார்த்தபோது, உடலை கண்டு கதறி அழுதனர். தகவல் அறிந்து விஷ்ணு காஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் பழனியப்பன் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர். பின்னர் வழக்கு பதிந்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஓட்டல் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா?



  • காசோலை மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜ் நேரில் ஆஜராக சம்மன்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு



  • ஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது



  • பொள்ளாச்சி அருகே கூட்டுறவு வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுன் தப்பியது: ஜன்னல் கம்பியை வளைத்து புகுந்தனர்



  • சத்தியமங்கலம் அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு



  • மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினாவில் பாதை: விரைவில் பணிகள் தொடக்கம்



  • சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்



  • பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்ட செயல்பாடு தமிழகம் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டது: 2017ஐ விட 6 இடங்கள் பின்தங்கியது



  • திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தல்



  • ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்துக்கு கமல்-ஷங்கர் பொறுப்பேற்க வேண்டும்: ஹீரோ எழுதிய கடிதத்துக்கு பட நிறுவனம் பதில்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]