இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பொள்ளாச்சி அருகே கூட்டுறவு வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுன் தப்பியது: ஜன்னல் கம்பியை வளைத்து புகுந்தனர்

2/27/2020 3:29:24 PM
ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா? சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கூட்டுறவு வங்கியின் லாக்கரை உடைக்கமுடியாததால் 100 பவுன் நகை, 5 லட்சம் தப்பியது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள மாரப்பகவுண்டன்புதூர் கிராமத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் செயல்படுகிறது. நேற்று முன்தினம்  வேலை முடிந்ததும் அலுவலர்கள் சென்றனர். காவலாளி காளியப்பன் பணியில் இருந்தார். இந்த நிலையில், நள்ளிரவில் வங்கிக்கு வந்த மர்ம நபர்கள், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக கட்டிடத்தின் பின் பகுதி ஜன்னல் கம்பிகளை நெம்பி உள்ளே சென்றுள்ளனர். பின்னர் வங்கி லாக்கரை உடைத்தபோது முடியாமல் திருடர்கள் வெளியேறிவிட்டனர்.

நேற்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள், இரும்பு லாக்கரில் வெல்டிங் கட்டரால் உடைப்பதற்கு முயற்சித்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயல் அலுவலர் சர்மிளாபானு கொடுத்த தகவல் அடிப்படையில், ஆனைமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். கொள்ளை முயற்சி நடந்தது தெரிய வந்தது. லாக்கரில் சுமார் 100 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் இருந்துள்ளது. கொள்ளையர் முயற்சி தோல்வி அடைந்ததால் அந்த நகை, பணம் தப்பியது.

மாரப்பகவுண்டன்புதூர் துவக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை சுற்றிலும் மின் விளக்கு வசதி போதியளவு இல்லை. கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் உள்ளது. இதனால், கொள்ளையர்கள் உள்ளே புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.  இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதித்து, வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா?



  • காஞ்சிபுரம் சரவண பவன் உணவக மேலாளர் தற்கொலை: சம்பள பிரச்னையா? விசாரணை



  • காசோலை மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜ் நேரில் ஆஜராக சம்மன்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு



  • ஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது



  • சத்தியமங்கலம் அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு



  • மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினாவில் பாதை: விரைவில் பணிகள் தொடக்கம்



  • சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்



  • பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்ட செயல்பாடு தமிழகம் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டது: 2017ஐ விட 6 இடங்கள் பின்தங்கியது



  • திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தல்



  • ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்துக்கு கமல்-ஷங்கர் பொறுப்பேற்க வேண்டும்: ஹீரோ எழுதிய கடிதத்துக்கு பட நிறுவனம் பதில்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]