இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

காங்கேயம் பகுதியில் பூஞ்சானம் பிடித்து கெட்டுப்போன ஆவின் கலப்பு தீவனம் விற்பனை: மாடுகளுக்கு நோய் தாக்கும் ஆபத்து

2/27/2020 3:18:29 PM
ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா? சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

காங்கேயம்: காங்கேயம் பகுதியில் சுமார் 100 பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கறவை மாடுகள் வளர்ப்போர் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை இந்த சங்கங்களுக்கு சப்ளை செய்து வருகின்றனர். இந்த சங்கங்கள் ஆவின் கலப்பு தீவனத்தை பால் உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். ஈரோடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் இந்த பகுதிகளுக்கு கலப்பு தீவனம் சப்ளை செய்யப்படுகிறது. காங்கேயம் அடுத்துள்ள மரவபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்பட்டு வரும் கலப்பு தீவன மூட்டைகளில் பல மூட்டைகளில் அடைக்கப்பட்டுள்ள கலப்பு தீவனம் பூஞ்சானம் பிடித்து கெட்டுபோயுள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தற்போது எங்களுக்கு வழங்கப்பட்ட ஆவின் கலப்பு தீவன மூட்டைகளில் பல மூட்டைகளில் தீவனம் பூஞ்சானம் பிடித்து கெட்டுப்போயுள்ளது. இந்த தீவனத்தை மாடுகளுக்கு கொடுத்தால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபற்றி ஆவின் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டால் அடுத்த லாட் வரும்போது கெட்டுப்போன தீவன மூட்டைகளை திரும்ப பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக வேறு மூட்டைகளை தருவதாக கூறுகின்றனர். அடுத்த லாட் வர மாதக்கணக்கில் ஆகும் என்பதால் அதுவரை கலப்பு தீவனத்திற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே கெட்டுப்போன கலப்பு தீவன மூட்டைகள் வழங்கப்பட்ட சங்கங்களில் இருந்து உடனடியாக பெற்றுக்கொண்டு மாற்று மூட்டைகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2 ஆண்டுக்கு முன்புவரை கலப்பு தீவனங்கள் சணல் சாக்குகளில் வழங்கப்பட்டு வந்தது. சணல் சாக்குகளைப் பொறுத்தவரை கலப்பு தீவனத்தில் ஈரப்பதம் இருந்தால் அந்த ஈரப்பதத்தை ஈர்த்துக்கொள்ளும் தன்மை சணல் சாக்குகளுக்கு உண்டு. அதனால் தீவனம் கெட்டுப்போகாமல் இருந்தது. தற்போது பாலித்தீன் சாக்குகளில் தீவனத்தை அடைத்து கொடுப்பதால் தீவனத்தில் ஈரப்பதம் இருந்தால் சில நாட்களிலேயே காற்றோட்டம் இல்லாத நிலையில் அவை கெட்டுப்போய் விடுகிறது. தற்போது வழங்கப்பட்ட தீவனம் கூட இந்த காரணத்தினால்தான் கெட்டுப்போயிருக்கும் என கருதுகிறோம். எனவே வரும் காலங்களில் சணல் சாக்குகளில் மட்டுமே கலப்பு தீவனத்தை வழங்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

மேலும் சில
  • கொரோனா வைரஸ் காரணமாக சொகுசுக் கப்பலில் சிறைபிடிக்கப்பட்டஇந்தியர்கள் 119 பேர் நாடு திரும்பினர்



  • பியர் கிரில்ஸுடன் மேன் வெர்சஸ் வைல்டு ரஜினியின் காட்டுப்பகுதி சாகசம் மார்ச் 23ம்தேதி ஒளிப்பரப்பு: டிஸ்கவரி சேனல் உறுதி செய்தது



  • லைக் கொடுத்ததால் வந்த சோதனை பேஸ்புக்கில் மாணவி போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல்: அரக்கோணம் வாலிபர் கைது



  • மத்திய அமைச்சர், பாஜ தலைவர்கள் மீது வழக்குப்பதிய உத்தரவிட்ட நீதிபதி திடீர் இடமாற்றம்: டெல்லி பார் கவுன்சில் கண்டனம்



  • தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தமாட்டோம் பாஜ கூட்டணியில் முதல் எதிர்ப்பு தீர்மானம்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதிரடி



  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - ஆதரவு போராட்டத்தில் மோதல்: டெல்லி கலவர பலி 20 ஆக அதிகரிப்பு...மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை



  • டெல்லி வன்முறை இன்றும் 2ம் நாளாக தொடர்கிறது வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு..பள்ளிகளுக்கு விடுமுறை



  • 17 மாநிலங்களில் 55 எம்பி பதவிகள் காலி: தமிழகத்தில் 6 எம்பி பதவிகளுக்கு தேர்தல்...தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியீடு



  • ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு: டிரம்ப்-மோடி முக்கிய பேச்சு...டெல்லியில் காந்தி சமாதியில் மலர்தூவி அஞ்சலி



  • 2 நாள் பயணமாக அகமதாபாத் வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு: 22 கி.மீ தூரத்துக்கு சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]