இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

துபாய், மலேசியா, இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 18 பேரிடம் ரூ5.5 கோடி தங்கம் பறிமுதல்: அதிகாரிகளை தாக்கி 4 கடத்தல் காரர்களை மீட்டு சென்ற கும்பலுக்கு வலைவீச்சு

2/20/2020 3:18:27 PM
ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா? சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

மீனம்பாக்கம்: துபாய், மலேசியா, இலங்கையில் இருந்து கடத்தி வந்த 18 பேரிடம் ரூ.5.5 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 18 பேரையும் விசாரணைக்காக வேனில் அழைத்து சென்ற சுங்க அதிகாரிகளை சரமாரியாக தாக்கி 4 பேரை 30 பேர் கும்பல் மீட்டு சென்றது. சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் துணையுடன் கடத்தல் தங்கம் வெளியில் எடுத்து வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 12 பேர் கொண்ட மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று காலையில் வந்தனர். சுங்கச்சோதனையை முடித்து விட்டு பயணிகள் வெளியே வரும் போர்ட்டிகோ பகுதியில் சாதாரண உடையில் நின்று கண்காணித்து கொண்டிருந்தனர்.

அப்போது, துபாய், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வந்த பயணிகளில் சந்தேகத்துக்கு இடமானவர்களை நிறுத்தி சோதனையிட தயாரானார்கள். அதற்கு அவர்கள், ‘நாங்கள் ஏற்கனவே சோதனையை முடித்து விட்டுதான் வந்துள்ளோம். நீங்கள் யார், எப்படி எங்களிடம் சோதனை நடத்தலாம்’ என்று வாக்குவாதம் செய்தனர். உடனே அவர்கள், ‘நாங்கள், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள்’ என்று கூறி, அவர்களது உடமைகளை சோதனையிட்டனர். இதில் சிலர், தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 18 பயணிகளை சந்தேகத்தின்பேரில், மீண்டும் உள்ளே அழைத்து சென்று தனி அறையில் சோதனையிட்டனர். அவர்களிடம் இருந்து, 12.6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். சர்வதேச மதிப்பு ரூ.5.5 கோடி. 18 பேரையும் கைது செய்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள், அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று தங்கத்தை கடத்தி வருபவர்கள் என்றும், கடத்தல் கும்பலுக்கு கூலியாக செயல்படுபவர்கள்.

சுங்கத்துறை அதிகாரிகள் சிலரது ஆதரவுடன் இந்த கடத்தல் நடந்துள்ளது’ என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, 5 சுங்க அதிகாரிகளை பிடித்து நேற்று நண்பகல் முதல் நள்ளிரவு வரை விசாரித்தனர். அவர்களில் அகமதாபாத்தை சேர்ந்த விகாஸ், கேரளாவை சேர்ந்த இ.வி.ராஜன் ஆகியோர், கடத்தல் ஆசாமிகளுக்கு மிக நெருக்கமானவர்கள். சுங்கச்சோதனை நடத்தாமலேயே கடத்தல்காரர்களை வெளியே அனுப்பியதும் தெரிந்தது. இதையடுத்து அவர்களை விசாரணைக்காக தி.நகரில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். மேலும், வேறு அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்றும் விசாரிக்கின்றனர். இதற்கிடையில், கைதான 18 பேரையும் வேனில் ஏற்றி நள்ளிரவு 12.30 மணிக்கு தி.நகரில் உள்ள அலுவலகத்துக்கு கொண்டு செல்ல தயாரானார்கள். அந்த நேரத்தில் திடீரென 30க்கும் மேற்பட்டோர், வேனை வழிமறித்தனர். அப்போது அவர்கள், ‘எங்களை கடத்தலுக்கு பயன்படுத்தியவர்களே சுங்க அதிகாரிகள்தான்.

அவர்களை விட்டு, இவர்களை எப்படி கைது செய்யலாம்’ என்று கூறியபடி, திடீரென வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளை தாக்கினர். அதோடு, 18 பேரில் 4 பேரை வேனில் இருந்து இறக்கி அழைத்து சென்றனர். மீதமுள்ளவர்களுடன் வேன் புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் தொடர்பாக வருவாய் துறை அதிகாரி பிரிதிவிராஜ், சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, அந்த கும்பலை தேடி வருகின்றனர். மேலும் சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
  • சர்ச், மருத்துவமனை கட்டுவதாக கூறி பேஸ்புக் மூலம் பல லட்சம் சுருட்டல்: நைஜீரியாவை சேர்ந்தவர் உட்பட 3 பேர் கைது



  • கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் விபரீதம் மட்டன் குழம்பில் சயனைடு கலந்து கணவனை கொல்ல முயன்ற மனைவி: 5 பேர் அதிரடி கைது



  • இளம்பெண் சாவில் திருப்பம்; கள்ளக்காதலியை கொடூரமாக கொன்று தூக்கில் தொங்கவிட்ட வாலிபர் கைது: உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார்



  • சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 8 ஆண்டு சிறை: கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு



  • வாட்ஸ் அப், வீடியோ காலில் அருவியாக கொட்டி ஆபாச பேச்சு; கள்ளக்காதலி உட்பட 40 பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த திருச்சி வங்கி ஊழியர்



  • ஆவடியில் பரபரப்பு அத்தையிடம் தகாத முறையில் நடக்க முயன்றதால் ஆட்டோ டிரைவர் கொலை: 2 தாய்மாமா கைது; பகீர் தகவல்



  • பெரியபாளையத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து பணம் கொள்ளை



  • திருச்சூர் அருகே ஆற்றில் வீசி 4வயது பெண் குழந்தையை கொன்ற ெகாடூர பெண்ணுக்கு ஆயுள் சிறை



  • மார்த்தாண்டம் நகைக் கடையில் கொள்ளை அதிமுக பிரமுகர் தப்பியோட்டம்: கடைக்கு சீல்; கார் பறிமுதல்



  • படுக்கையறையில் செல்போன்களை பொருத்தி மனைவியின் கள்ளஉறவை பதிவு செய்த கணவர்: கள்ளக்காதல் ஜோடி கொலையில் பரபரப்பு தகவல்கள்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]