இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வியாபாரி, அதிகாரி, டாக்டர் வீடுகளில் 100 பவுன் நகைகள் கொள்ளை

2/6/2025 3:28:16 PM
விஜய்யை விசாரிக்கும் திட்டம் இப்போது இல்லை அன்புச்செழியனுக்கு ஐடி சம்மன்: இன்று நேரில் ஆஜராக அறிவுறுத்தல் ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு: 274 எண்ணெய் கிணறுகள் பணி நிறுத்தப்படுமா?..பழைய ஒப்பந்தம் ரத்து ஆகுமா

கரூர்: கரூர் மற்றும் சேலத்தில் 100 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.கரூர் கோவை ரோடு வடிவேல் நகரை சேர்ந்தவர் சுரேஷ்(38), இவர் கரூரில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். சுரேசுக்கு  உதவியாக அவரது மனைவி மதுமிதாவும் கடைக்கு வந்து வியாபாரத்தை கவனிப்பார். நேற்று காலை சுரேஷும், மதுமிதாவும் கடைக்கு ெசன்றுவிட்டனர்.  வீட்டில் வயதான சுரேஷின் தாயார் மட்டும் இருந்தார். அவர் நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டு 6 மணி அளவில்  வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தார் பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த நகைகளை காணவில்லை. பீரோவில்  இருந்த 49 பவுன் தங்க நகைகள், 5பவுன் வைர நெக்லஸ்  கொள்ளை போய் இருந்தது. தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வழக்கு  பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

சேலம்
சேலம் சூரமங்கலம் முல்லை நகரை சேர்ந்தவர் பசுபதி (57). இவர் சேலம் ரயில் நிலையத்தில் டிக்கெட் புக்கிங் முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றி  வருகிறார். இவரது மனைவி கனகராணி. இவர்களது மகள் கார்த்திகாவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, வரும் 26ம் தேதி திருமணம் நடக்கிறது. இதற்காக பசுபதி உறவினர்களுக்கு பத்திரிக்கை கொடுக்கும் பணியில்  ஈடுபட்டுள்ளார். கடந்த 4ம் தேதி பசுபதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினர்களுக்கு மகளின் திருமண அழைப்பிதழை கொடுக்க மனைவி, மகளுடன் சென்றார்.  அங்கு திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுத்து விட்டு இன்று காலை சேலத்துக்கு வந்தனர்.

வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள்  திறந்திருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவை உடைத்து 43 பவுன்  நகை, ₹ 20 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மற்றொரு சம்பவம்
சேலம் குரங்குசாவடி பெருமாள் மலை அடிவார பகுதியை சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். இவர் குடும்பத்துடன் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு  கொளத்தூரில் உள்ள உறவினர் திருமணத்துக்கு சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து  இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்தும் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • கல்பாக்கம் அருகே கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது



  • ரூ.60 லட்சம் தராவிட்டால் வெடிகுண்டு வீசி கொல்வோம்: அதிமுக மாஜி சேர்மனுக்கு மிரட்டல்



  • மாணவிகளை விரட்டி விரட்டி தாக்க முயற்சி போதை தலைக்கேறிய போலீஸ்காரர் அட்டகாசம்



  • 4 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு: 74 வயது பெரிசுக்கு 7 ஆண்டு சிறை



  • திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் ரூ.8 லட்சம் வைர கற்களுடன் ஆசாமி கைது



  • நர்சுடன் கணவனுக்கு தொடர்பு காவல்நிலையத்தில் மனைவி தர்ணா: புளியந்தோப்பில் பரபரப்பு



  • டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் தேடப்பட்ட இடைத்தரகர் ஜெயகுமார் நீதிமன்றத்தில் சரண்



  • தி.மலை அருகே குலதெய்வ கோயிலில் இன்று நடந்தது காமெடி நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்



  • ஐதராபாத்தில் ரூ.90 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட மீன் வியாபாரி அடித்துக் கொலை: சாக்குப்பையில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு



  • கலப்பட நெய் தயாரிப்பு: பெண்கள் உள்பட 8 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]