இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஆளுநர் மீது வழக்கு: உத்தரபிரதேச போலீஸ் நடவடிக்கை

2/4/2025 4:36:41 PM
ரூ.10 கோடி அபராதம் செலுத்த தவறினால் சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறை?: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு

லக்னோ: சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் கவர்னர் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவுக்கு (என்ஆர்சி) எதிராக ேநற்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஏற்பாடு செய்யப்பட்ட மெழுகுவர்த்தி அணிவகுப்பு நடந்தது. அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த அணிவகுப்பில் பங்கேற்றதற்காக முன்னாள் உத்தரகண்ட் மற்றும் உத்தரபிரதேச ஆளுநர் அஜீஸ் குரேஷி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோமதி நகர் காவல் நிலையத்தில் இன்று பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரின்படி, மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் அனுமதியின்றி அணிவகுப்பு நடத்தப்பட்டதாகவும், அணிவகுப்பை நடத்துவதற்கு எந்தவொரு எழுத்துப்பூர்வ அனுமதியையும், போராட்டக்காரர்கள் பெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, எப்.ஐ.ஆரில் அணிவகுப்பின் தலைவர்களில் ஒருவராக குரேஷி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர், கடந்த ஜன. 30ம் தேதியன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை வகுப்புவாத சட்டம் என்றும், மதத்தின் அடிப்படையில் இந்த நாட்டிற்கு எதுவும் தேவையில்லை என்றும், இங்குள்ளவர்களுக்கு வேலை தேவை. இங்குள்ள மக்களுக்கான அநீதிக்கு எதிராக நீதி தேவை என்றும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள், சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மறுத்த நிலையில், புதிதாக இயற்றப்பட்ட சட்டம் நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது.

மேலும் சில
  • திருப்பதி கோயில் உண்டியலில் செலுத்திய கை கடிகாரங்கள் ஆன்லைனில் ஏலம்



  • மருத்துவமனையில் 84 பேர் கண்காணிப்பு: கேரளாவை மிரட்டும் கொரோனா...மாநில பேரிடராக அறிவிப்பு



  • கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு



  • வரும் 8ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் டெல்லியில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சி? : கருத்துக் கணிப்பு முடிவில் தகவல்



  • ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் விவசாய நிலத்தில் செல்லும் பைப் லைனில் கேஸ் கசிவு: மின்சாரம் துண்டிப்பு; மக்கள் ஓட்டம்



  • தந்தை என்கவுன்டர், தாய் அடித்துக் கொலை: தவித்த சிறுமியை தத்தெடுத்த போலீஸ் ஐஜி: உத்தரபிரதேச மாநிலத்தில் நெகிழ்ச்சி



  • தமிழ்நாடு, பெங்களூரு, டெல்லியில் ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது எதிரொலி: போலீசாருக்கு தீவிரவாதிகள் மிரட்டல்...தமிழில் எழுதப்பட்ட அச்சுறுத்தல் பதிவு சிக்கியது



  • சிஏஏ ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது 4 நாளில் 3வது முறையாக டெல்லியில் நள்ளிரவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு...தேர்தல் பணியில் இருந்து போலீஸ் அதிகாரி அதிரடி நீக்கம்



  • உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வு முன்பாக சபரிமலை வழக்கு நாளை விசாரணை



  • சீனாவில் இருந்து 2வது முறையாக இன்று காலை: 28 தமிழர்கள் உட்பட 323 பேர் டெல்லி வந்தனர்: இதுவரை 81 தமிழர் உட்பட 654 பேர் மீட்பு: சீனாவில் வைரஸ் பலி 304 ஆக அதிகரிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]