திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பலராமன் எம்எல்ஏ இல்ல திருமணம் இன்று நடந்தது: முதல்வர் வாழ்த்து
1/30/2020 3:47:16 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்எல்ஏ இல்ல திருமணம் இன்று நடந்தது. மணமக்களை முதல்வர் வாழ்த்தினார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்எல்ஏ-ப.குப்பாபாய், செங்கை எஸ்.கே.சேகர்-வட்டாட்சியர் ஜெ.சுமதி ஆகியோரின் மகனான மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.ராகேஷ் மற்றும் பாடியநல்லூர் பி.மணிவண்ணன்-எம்.பஞ்சவர்ணம் ஆகியோரின் மகள் எம்.பவித்ரா ஆகியோரது திருமணம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் இன்று காலை நடந்தது. நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.
இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, பா.பெஞ்சமின், தம்பிதுரை, சி.பொன்னையன், பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் காட்டுப்பாக்கம் ஜி.திருநாவுக்கரசு, மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ ஏ.பாஸ்கரன், எஸ்.எஸ்.எஸ்.சரவணன் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள், நிர்வாகிகள் மணமக்களை வாழ்த்தினர். விழாவுக்கு வந்தவர்களை முன்னாள் ஒன்றிய குழு துணைத்தலைவர் கே.நடராஜன், முன்னாள் ஊராட்சி தலைவர் கே.பார்த்தீபன், வக்கீல் என்.வி.சரவணன், எம்.திருநாவுக்கரசு, எம்.சரவணன், ஜெயலட்சுமி சரவணன், பாஸ்கரன், ஜெயராமன், எஸ்.சூர்யா, எஸ்.ஸ்ருதி, வி.நேகா, எஸ்எஸ்எஸ் இரா.சரவணன் ஆகியோர் வரவேற்றனர்.