இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தாமதம்: பொது மக்கள் தவிப்பு

1/9/2025 3:21:09 PM
வருமான வரியில் 6 ஆண்டுகளில் பா.ஜ. அரசு செய்த மாற்றங்கள் நோக்கத்தை சந்தேகிக்க வேண்டாம் மோடி ஒரு 24 காரட் தங்கம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பல ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பொருட்கள், பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் நுகர்வோர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் 5,62,583 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சக்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் 2 அடி கரும்பு துண்டுடன் தலா ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் வேட்டி-சேலை வழங்கப்பட உள்ளது. இதற்காக 11,252 கிலோ முந்திரி, 11,252 கிலோ உலர் திராட்சை, 2,813 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடலூர் மாவட்டத்தில் இருந்து 2,50,037 கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளுக்கு இன்று காலை 10 மணிக்கு பிறகே வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டது. இவை, கடைகளுக்கு சென்று சேர பகல் 12 மணி ஆகிவிட்டது. அதோடு, பொங்கல் பரிசுடன் வழங்க வேண்டிய ரொக்கப்பணம், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் காலை 10 மணிக்கு வங்கியில் இருந்து எடுக்கப்பட்டு, அந்தந்த செயலாளர்கள் மூலம் ரேஷன் கடைகளுக்கு சென்று வழங்கவும் பகல் 12 மணிக்கு மேலானது.

இதனால், பொங்கல் பரிசு வழங்கும் பணி தாமதமாக தொடங்கியது. தினமும் காலை 8.30 மணி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்த நிலையில், அனைத்து ரேஷன் கடைகள் முன்பு காலை 8 மணிக்கே மக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பொங்கல் பரிசு பெற பல மணி நேரம் காத்திருந்தனர். மேலும் ஒரே நாளில் பொதுமக்கள் ரேஷன் கடை முன் குவிவார்கள் என்பதாலும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், ஒரு ரேஷன் கடைக்கு ஒரு போலீஸ் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரேஷன் கடைகளில் தகராறு நடந்தால், நிலைமையை உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை சமாளிக்க ஒவ்வொரு போலீஸ் சப்-டிவிஷனிலும், அதிரடி படை போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சில
  • 11,900 சதுர அடி பரப்பில் 110 குண்டங்கள் அமைப்பு தஞ்சை பெரிய கோயிலில் யாகசாலை பூஜை இன்று துவக்கம்: 400 சிவாச்சாரியார்கள் பங்கேற்பு



  • ரகசிய விசாரணையில் அம்பலம் தமிழக சிறைகளில் தலைவிரித்தாடும் லஞ்சம்



  • சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது துரதிஷ்டவசமானது: தலைமை நீதிபதி வேதனை



  • வேலை வாங்கி தருவதாக ₹95 லட்சம் மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் சோதனை



  • பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு தஞ்சை பெரியகோயிலில் நாளை யாகசாலை பூஜைகள் துவக்கம்



  • வங்கிகள் ஸ்டிரைக் தொடங்கியது: ரூ.23 ஆயிரம் கோடி பரிவர்த்தனை முடக்கம்



  • விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு



  • பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 அறைகள் இடிந்து தரைமட்டம்



  • ஆந்திரா பொன்னிரக நெல் விதை விற்பனையை தடை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்



  • குமரி எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு: திருச்சூருக்கு அழைத்து சென்று தீவிரவாதிகளிடம் விசாரணை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]