திருவள்ளூர் மாவட்டத்தில் மறியல்: 794 பேர் மீது வழக்குப்பதிவு
1/9/2025 3:20:08 PM
திருவள்ளூர்: அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை நிறுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று அகில இந்திய அளவிலான வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் உழவர் சந்தை அருகே மறியலில் ஈடுபட்டதாக 275 பேர், கும்மிடிப்பூண்டி தபால் நிலையம் அருகே 49 பேர், சோழவரம் காந்தி நகர் அருகே 126 பேர், மீஞ்சூர் அத்திப்பட்டு புதுநகர் அருகே 116 பேர், திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகே 228 பேர் என மொத்தம் 400 பெண்கள் உட்பட 794 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதும், அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக சாலையின் நடுவில் ஒன்றுகூடி, மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாகவும் சம்பந்தப்பட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.