இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

100 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிரை புகையான் நோய் தாக்கியது: கடன் வாங்கிய விவசாயிகள் கண்ணீர்

1/9/2025 3:04:32 PM
மகளின் பிறந்த நாளை கொண்டாட அழைத்து சென்று மிரட்டல்: பிணைக்கைதியாக அடைக்கப்பட்ட 23 குழந்தைகள் மீட்பு வேலை வாங்கி தருவதாக ₹95 லட்சம் மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் சோதனை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே 100 ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை புகையான் நோய் தாக்கியது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சியில் 100க்கு மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்துள்ளனர். ஆனால் திருவள்ளூர் மாவட்டத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை பொய்த்துப்போனதால் நெல் பயிர்களுக்கு பாய்ச்ச போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் சில விவசாயிகள், பக்கத்து நிலத்துக்காரர்களிடம் இருந்து பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் நெய்பயிர்களை புகையான் நோய் தாக்கியுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த முடியாததால் நெற்பயிர்களில் பால் பிடித்து நெற்கதிர் முற்றிய நிலையில் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது; ஒரு ஏக்கருக்கு ₹25 ஆயிரம் செலவு செய்து நெற்பயிர் சாகுபடி செய்துள்ளோம். அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், பயிர்களில் புகையான் நோய் தாக்கியுள்ளது. ஒரு ஏக்கருக்கு 30மூட்டை விளையவேண்டிய நிலத்தில் 3 மூட்டை நெல்லாவது கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது. அறுவடை செய்யும்  கூலி கூட கிடைக்காத நிலைமையில் உள்ளோம். ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் பகுதிகளில் விதை நெல் விற்பனை மையத்திலும் ஒரு சிலர் வேளாண்மை துறை அலுவலகத்திலும் விதை நெல் வாங்கி பயிர் செய்து வேளாண்மைதுறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்படிதான் பயிர் செய்கிறோம். ஆனால் புகையான் நோய் தாக்கி பயிர்கள் அனைத்தும் பதர்களாக மாறிவிட்டது. கூட்டுறவு சங்கத்தில் மட்டுமல்லாமல் தனி நபரிடமும் கடன் வாங்கி பயிர் செய்துள்ளோம். புகையான் நோய் தாக்கியுள்ளதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. புகையான் தாக்கி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

மேலும் சில
  • சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது துரதிஷ்டவசமானது: தலைமை நீதிபதி வேதனை



  • வேலை வாங்கி தருவதாக ₹95 லட்சம் மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் சோதனை



  • பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு தஞ்சை பெரியகோயிலில் நாளை யாகசாலை பூஜைகள் துவக்கம்



  • வங்கிகள் ஸ்டிரைக் தொடங்கியது: ரூ.23 ஆயிரம் கோடி பரிவர்த்தனை முடக்கம்



  • விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு



  • பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 அறைகள் இடிந்து தரைமட்டம்



  • ஆந்திரா பொன்னிரக நெல் விதை விற்பனையை தடை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்



  • குமரி எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு: திருச்சூருக்கு அழைத்து சென்று தீவிரவாதிகளிடம் விசாரணை



  • சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா



  • திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பலராமன் எம்எல்ஏ இல்ல திருமணம் இன்று நடந்தது: முதல்வர் வாழ்த்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]