இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 30 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்

1/9/2025 2:59:33 PM
வருமான வரியில் 6 ஆண்டுகளில் பா.ஜ. அரசு செய்த மாற்றங்கள் நோக்கத்தை சந்தேகிக்க வேண்டாம் மோடி ஒரு 24 காரட் தங்கம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

அண்ணாநகர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு 30 ஆயிரம் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். பொங்கல் பண்டிகை நெருங்குகிறது. சென்னையில் வசிக்கும் பலர், பொங்கல் பண்டிகை  கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு மையம், கோயம்பேடு பஸ் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இந்த மையத்தை இன்று காலை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, கோயம்பேடு பஸ் நிலையம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிறுத்தம், மாதவரம் புதிய பஸ் நிலையம், பூந்தமல்லி நகராட்சி பஸ் நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பஸ் நிலையம் ஆகிய 5 இடங்களில் இருந்து நாளை (10ம் தேதி) முதல் வரும் 14ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து 9445014450, 9445014436 என்ற செல்போன் எண்கள் மூலம் விவரங்களை அறிந்து கொள்ளலாம். இதற்கென 17 முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக பஸ் நிலையங்கள் நாளை முதல் 14ம் தேதி வரை செயல்படும். பொங்கல் பண்டிகை விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கென மொத்த 30,120 சிறப்பு அரசு பேருந்து இயக்கப்படுகின்றன. இந்த பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோருக்காக மொத்தம் 25,877 பஸ்கள் இயக்க உள்ளோம். சென்ற ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது 7 லட்சம் பேர் பயணம் செய்தனர். இந்த வருடம் விடுமுறை தினம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக 2 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • 11,900 சதுர அடி பரப்பில் 110 குண்டங்கள் அமைப்பு தஞ்சை பெரிய கோயிலில் யாகசாலை பூஜை இன்று துவக்கம்: 400 சிவாச்சாரியார்கள் பங்கேற்பு



  • ரகசிய விசாரணையில் அம்பலம் தமிழக சிறைகளில் தலைவிரித்தாடும் லஞ்சம்



  • சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது துரதிஷ்டவசமானது: தலைமை நீதிபதி வேதனை



  • வேலை வாங்கி தருவதாக ₹95 லட்சம் மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் சோதனை



  • பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு தஞ்சை பெரியகோயிலில் நாளை யாகசாலை பூஜைகள் துவக்கம்



  • வங்கிகள் ஸ்டிரைக் தொடங்கியது: ரூ.23 ஆயிரம் கோடி பரிவர்த்தனை முடக்கம்



  • விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு



  • பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 அறைகள் இடிந்து தரைமட்டம்



  • ஆந்திரா பொன்னிரக நெல் விதை விற்பனையை தடை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்



  • குமரி எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு: திருச்சூருக்கு அழைத்து சென்று தீவிரவாதிகளிடம் விசாரணை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]