இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வங்கியில் ரூ.25 கோடி கடன் வாங்கி தருவதாக கட்டுமான நிறுவனத்திடம் ரூ.1.21 கோடி மோசடி செய்த 2 பேர் கைது

1/7/2025 3:13:39 PM
கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம் மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?

சென்னை: பெங்களூரு கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.25 கோடி வங்கியில் கடன் வாங்கி தருவதாக ரூ.1.21 கோடி பணம் பெற்று மோசடி செய்த இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் என்பவர் கடந்த மாதம் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சரவணன் மற்றும் கிஷோர் ஆகியோர் தங்களுக்கு தெரிந்த வங்கி அதிகாரிகள் மூலம் ரூ.25 கோடி பணம் கடன் வாங்கி தருவதாக தெரிவித்தனர். அதற்காக ரூ.1.21 கோடி கமிஷனாக அவர்கள் கடன் வாங்கி கொடுக்கும் முன்பே பணத்தை பெற்று கொண்டனர். ஆனால் சொன்னபடி இருவரும் எங்கள் கட்டுமான நிறுவனத்திற்கு வங்கியில் கடன் வாங்கி தரவில்லை.

பின்னர் நான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போது அவர்கள் உரிய பதில் அளிக்காமல் காலம் கடத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுத்து ரூ.1.21 கோடி பணத்ைத மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார். புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பெங்களூரு கட்டுமான நிறுவனத்திற்கு கடன் வாங்கி கொடுப்பதாக ரூ.1.21 கோடி பணம் பெற்று திருமங்கலத்தை சேர்ந்த சரவணன் மற்றும் கிஷோர் ஆகியோர் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. அதைதொடர்ந்து போலீசார் இருவரையும் நேற்று இரவு கைது செய்தனர்.

மேலும் சில
  • திருத்தணி அருகே பணம் வசூலிக்க சென்ற பெண் விஷம் ஊற்றி கொடூர கொலை: சவுக்குத் தோப்பில் சடலம் மீட்பு



  • அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம்: நடிகர் ஷாம் உள்பட 13 பேர் அதிரடி கைது



  • மதுரை ஜிஹெச்சில் பயங்கரம்; நோயாளி சரமாரி வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்



  • காதல் திருமணம் செய்ததால் இளம்பெண் காரில் கடத்தல்: தந்தை, தாய் உட்பட 3 பேர் மீது வழக்கு



  • வெடிகுண்டு வீசியும் சரமாரி வெட்டியும் பிரபல ரவுடி படுகொலை: புதுச்சேரியில் பயங்கரம்



  • வேளச்சேரி அருகே கால்டாக்சி டிரைவர் வெட்டி கொலை: ஒருவர் கைது



  • ‘கள்ளக்காதலி மாதிரி நீ அழகாக இல்லை’ புதுப்பெண்ணை அடித்து சித்ரவதை: கொடூர இன்ஜினியர் கைது



  • ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து அனகாபுத்தூரில் கஞ்சா விற்பனை; 4 பேர் கைது



  • ஆவடி அருகே மீன் வியாபாரி கொடூர கொலையில் 3 பேர் கைது: பிரபல ரவுடிக்கு வலை



  • திருமுல்லைவாயலில் இன்று காலை மீன் வியாபாரி சரமாரி வெட்டி படுகொலை: 2 நண்பர்களுக்கு வலை வீச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]