இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு ‘இந்து ரக்ஷா தளம்’ அமைப்பு பொறுப்பேற்பு

1/7/2025 3:06:13 PM
கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம் மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?

புதுடெல்லி: டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு ‘இந்து ரக்ஷா தளம்’ என்ற தீவிர வலதுசாரி குழு பொறுப்பேற்பதாக, அதன் நிர்வாகி பிங்கி சவுத்ரி பேட்டி அளித்துள்ளார். இதற்கிடையே ‘சர்வர்’ அறையை அடித்து நொறுக்கியதாக கூறி மாணவர் சங்க தலைவர் உட்பட 19 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதிக்குள் கடந்த 5ம் தேதி புகுந்து மாணவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்திய முகமூடி கும்பலுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஜேஎன்யூ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான தாக்குதலுக்கு ‘இந்து ரக்ஷா தளம்’ என்ற தீவிர வலதுசாரி குழு பொறுப்பேற்றுள்ளது.

இதுதொடர்பாக, ‘இந்து ரக்ஷா தளம்’ குழுத் தலைவர் பூபேந்திர தோமர் என்கிற பிங்கி சவுத்ரி என்பவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தேசவிரோத மற்றும் இந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் சிலர் ஈடுபட்டு வருவதால், எங்களது அமைப்பை சேர்ந்த சிலர் இந்த தாக்குதலை நடத்தினர். ஜேஎன்யூ என்பது தேசிய விரோத நடவடிக்கைகளின் மையம். இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது. ஜேஎன்யு-வில் நடந்த தாக்குதலின் முழுப் பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அவர்கள் எங்கள் அமைப்பினர் என்று கூற விரும்புகிறோம். எதிர்காலத்தில், யாராவது தேச விரோத செயல்களில் ஈடுபட முயன்றால், பிற பல்கலைக்கழகங்களிலும் இதே நடவடிக்கையை எடுப்போம். அவர்கள் நம் நாட்டில் வாழ்கிறார்கள்; அவர்கள் இங்கே சாப்பிடுகிறார்கள்; கல்வியைப் பெறுகிறார்கள்; பின்னர் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். ஜேஎன்யூ தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் எங்கள் அமைப்பினர். நாட்டிற்காக எங்கள் வாழ்க்கையை தியாகம் செய்ய நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசார், இரண்டு எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்துள்ளனர். அவற்றில் ஒன்று ஜன. 5ம் தேதி வன்முறைக்கு முன்னதாக, பல்கலைக்கழகத்தின் ‘சர்வர்’ அறையை அடித்து நொறுக்கியதற்காக ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் ஆயி கோஷ் மற்றும் 19 பேர் மீது வழக்குபதியப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக மற்றொரு வழக்கும் பதியப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையினர் இந்த வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளனர். இருப்பினும், வன்முறை தாக்குதல் தொடர்பாக காவல்துறையினர் இன்னும் எவரையும் கைது செய்யவில்லை. தற்போது தாக்குதல் சம்பவத்துக்கு ‘இந்து ரக்ஷா தளம்’ பொறுப்பேற்றுள்ளதால், அதன் நிர்வாகி பிங்கி சவுத்ரி அளித்த பேட்டியின் அடிப்படையில் போலீசார் அந்த அமைப்பினரை அடையாளம் கண்டு விசாரித்து வருகின்றனர். மேலும், ஜேஎன்யூ-வில் முகமூடி அணிந்து கொண்டு வந்தவர்கள் குறித்த வீடியோ காட்சிகள் மற்றும் முகம் அடையாளம் காணும் அமைப்புகளின் உதவியை டெல்லி போலீசார் நாடி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில
  • கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம்



  • மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?



  • உலகளவில் அமெரிக்காவை முந்தியதால் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்; ஒரே நாளில் 64,399 பேருக்கு நோய்தொற்று



  • கேரளாவில் நேற்றிரவு விமான விபத்து; பைலட், உதவி பைலட் உட்பட 19 பேர் பலி; 10 பேர் கவலைக்கிடம்



  • மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு; மண்ணில் புதைந்த 54 தமிழர்கள் கதி என்ன?..தேடும் பணி தீவிரம்; மீட்பு படை விரைவு



  • மூணாறு அருகே இன்று அதிகாலை நிலச்சரிவு; 80 தமிழக தொழிலாளர் கதி என்ன?....4 உடல்கள் கண்டெடுப்பு



  • அயோத்தியில் கோலாகல விழா: ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி



  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]