இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தந்தை கைது இந்த கடிதத்தை எழுதும்போது என் கைகள் நடுங்குகின்றன: உ.பி முதல்வருக்கு 15 வயது சிறுவனின் கண்ணீர் கடிதம்

1/5/2025 2:16:42 PM
விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா

லக்னோ: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட தந்தையின் பிரிவால் வருந்தும் 15 வயது சிறுவன், உத்தரபிரதேச முதல்வருக்கு எழுதிய கண்ணீர் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த டிச. 19ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் வன்முறையாக மாறிய சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களின் தொடர்ச்சியாக சிறையில் அடைக்கப்பட்ட செயற்பாட்டாளர் தீபக் கபீரின் 15 வயது மகன் சூஃபி, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: அன்புள்ள திரு.யோகி, உங்களுக்கு 2020ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக இருக்கும் என்றே நம்புகிறேன். குரல்களை அடக்குவது, குழந்தைகள் கொலை செய்யப்பட்டது போன்றவை குறித்து எவ்வாறு நீங்கள் பதிலளிப்பீர்கள் என்று உறுதியாக தெரியவில்லை. சரி, என் தந்தை கடந்த 15 நாட்களாக சிறையில் இருக்கிறார். எனது சொந்த நகரத்தைச் சுற்றிய கொடூரங்களை நான் கண்டிருக்கிறேன். அதனை எதிர்ப்பது, அரசாங்கத்தை விமர்சிப்பது, அநியாய சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்புவது நமது அரசியலமைப்பு உரிமை என்று கற்பிக்கப்பட்டுள்ளேன்.

நான் சிறு வயதிலிருந்தே எதிர்ப்புக்களுடன் செல்லத் தொடங்கிய சூழலில் வளர்ந்திருக்கிறேன். அநீதிக்கு எதிராக எப்போதும் எழுந்து நிற்க வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். வன்முறையில் ஈடுபட்டவர்களை உங்கள் காவல்துறை ஏன் கைது செய்யவில்லை என்று சொல்லுங்கள். அவ்வாறு செய்திருந்தால் நான் உங்களை ஆதரித்திருப்பேன். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான அப்பாவிகளை ஏன் கைது செய்தீர்கள் என்று சொல்லுங்கள்?. எனக்கு 15 வயது, இந்த 15 ஆண்டுகளில் நிறைய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் கலந்து கொண்டேன். தற்போது ஏற்பட்டுள்ள பயத்தை போன்று, நான் ஒருபோதும் அனுபவித்ததில்லை. உங்கள் வகுப்புவாத பிரசாரத்தின் காரணமாக எனது நண்பர்கள் திகிலடைந்துள்ளனர். ஆர்வலர்கள் மற்றும் அப்பாவிகள் பூட்டப்பட்டுள்ளனர். கலகக்காரர்களும் குற்றவாளிகளும் தாராளமாக சுற்றித் திரிகிறார்கள். நான் எனது தந்தையை கடைசியாகப் பார்த்தது எதிர்ப்பு போராட்டத்துக்கு ஒரு நாள் கழித்துதான். ஆமாம், கைது செய்யப்பட்ட நபர்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக காவல் நிலையம் சென்றபோது பார்த்தேன்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக நகரத்தைச் சுற்றி நல்லிணக்கத்தையும் கலாசாரத்தையும் வளர்த்த ஒருவர் கலகக்காரர் என்ற பெயரில் கைது செய்யப்பட்டார். என் தந்தை எல்லோராலும் பாராட்டக் கூடியவர். நீங்கள் ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கைது செய்துள்ளீர்கள். இன்னும் உங்களை நீங்கள் ஜனநாயகவாதி என்று அழைக்கிறீர்கள். நீங்கள் குழந்தைகளுக்குள் பயத்தை வைத்திருக்கிறீர்கள்.நான் இந்த கடிதத்தை எழுதும்போது என் கைகள் நடுங்குகின்றன. நீங்கள் செய்த ஒவ்வொரு ஜனநாயக விரோத செயலுக்கும் வாழ்த்துக்கள். என் தந்தை விடுவிக்கப்பட்ட நாளில், நீங்கள் அவருடன் பேச வேண்டும். அவருடைய சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அவர் ஊக்குவிப்பது அமைதிதான். முடிவாக, எனது தந்தையையும் அனைத்து அப்பாவிகளையும் விரைவில் விடுவிப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சூஃபியின் தந்தை கபீருக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுக்கப்பட்டது. மேலும் அவரது மனு நாளை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் சூஃபி-யும் அவரது குடும்பத்தாரும் உள்ளனர்.

மேலும் சில
  • ஜாமியா பல்கலைக்கழக வன்முறை: 70 பேரின் புகைப்படம் வெளியீடு... டெல்லி காவல்துறை அறிவிப்பு



  • அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் சபர்மதிக்கு டிரம்ப் வருகை: குஜராத் முதல்வர் தகவல்



  • டெல்லி பள்ளிகள் தொடர்பாக போலி வீடியோ பகிர்ந்த அமித்ஷா: தடை விதிக்க ஆம்ஆத்மி புகார்



  • டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு மம்தா கட்சி ஆதரவு: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவில்லை



  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: நாளை மறுநாள் மத்திய பட்ஜெட்



  • டிவி செய்தி ஆசிரியரிடம் வம்பிழுத்த காமெடி நடிகர் எங்க விமானத்தில் 6 மாசத்துக்கு ஏறாதீங்க..! 2 விமான நிறுவனங்கள் தடை விதித்ததால் பரபரப்பு



  • குடியுரிமை சட்டம் குறித்து வாசிக்க மறுப்பு கேரள கவர்னர் தடுத்து நிறுத்தம்: சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்துக் கிடக்கும் 80டன் நாணயம்: ஒரு டன் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை



  • இந்தியாவில் வைரஸ் தடுப்பு தீவிரம்



  • சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களுக்கு நிதியுதவி: குறிப்பிட்ட சமுதாய அமைப்பின் வங்கிக் கணக்கில் ₹120 கோடி டெபாசிட்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]