இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் 11 மாநில முதல்வர்களுக்கு பினராயி விஜயன் கடிதம்

1/4/2025 2:27:30 PM
விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்ட பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று  மேற்கு வங்கம், டெல்லி உட்பட 11  மாநில முதல்வர்களுக்கு ேகரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் அனுப்பியுள்ளார்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சட்டத்தை வாபஸ் பெற கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஜார்கண்ட், மேற்கு வங்காளம், டெல்லி, மகராஷ்டிரா, பீகார், ஆந்திரா, புதுச்சேரி, மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய பா.ஜ. ஆளாத 11 மாநில முதல்வர்களுக்கு நேற்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது நாட்டின் அடிப்படை தத்துவம்.

ஆனால் சில சக்திகள் ஒற்றுமையாக வாழும் மக்களிடம் பிரிவினைவாதம் என்ற விஷத்தை விதைக்கிறார்கள். இதை அனுமதிக்கக்கூடாது. ஜனநாயகத்தையும் மதசார்பின்மையையும், பாதுகாக்க வேண்டியது இந்த காலகட்டத்தின் கட்டாயமாகும். எல்லா கருத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு சமூக நன்மைக்காக ஒன்று சேர்ந்து ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் தயாராக வேண்டும். தற்ேபாது ஏற்பட்டுள்ள இந்த சிக்கலை அனைவரும் ஓரணியில் திரண்டு எதிர்கொள்ள வேண்டும். தேசிய குடியுரிமை பதிவேட்டை குறித்துதான் தற்போது கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் செயல்பாடுகளை தேசிய குடியுரிமை பதிவேட்டிற்காக பயன்படுத்தப்போவதாக கூறப்படுகிறது. எனவே தான் கேரளாவில் தேசிய மக்கள் ெதாகை கணக்கெடுப்பின் செயல்பாடுகளை நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம். இது போல குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாட்டிற்கு ஆபத்தை எற்படுத்தும் என்பதால் அந்த தீர்மானத்தை வாபஸ் பெற கோரி கேரள சட்டசபையில் கடந்த 31ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இதுபோல அனைத்து மாநிலங்களும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும். அப்படி செய்தால் மத்திய அரசு தனது முடிவை மாற்ற வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சில
  • விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு



  • பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 அறைகள் இடிந்து தரைமட்டம்



  • ஆந்திரா பொன்னிரக நெல் விதை விற்பனையை தடை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்



  • குமரி எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு: திருச்சூருக்கு அழைத்து சென்று தீவிரவாதிகளிடம் விசாரணை



  • சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா



  • திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பலராமன் எம்எல்ஏ இல்ல திருமணம் இன்று நடந்தது: முதல்வர் வாழ்த்து



  • அதிமுக பிரமுகரின் 3 கார்கள் உடைப்பு: வேளச்சேரியில் பரபரப்பு



  • மோடி ஆட்சியால் நாட்டுக்கு பேராபத்து: பாலகிருஷ்ணன் பேச்சு



  • காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில் உள்ள பள்ளிக்கூடத்தில் கழிவுநீர் தேக்கம்



  • காட்டாங்கொளத்தூர் அருகே பரபரப்பு: போர்வெல் பணியை தடுப்பதா?.. திமுக-அதிமுகவினர் வாக்குவாதம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]