இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

30 ஆண்டுகளாக வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வேண்டும்: பல்கலை. விவாத நிகழ்ச்சியில் கோரிக்கை

1/4/2025 2:26:27 PM
விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா

சென்னை: தமிழகத்தில் 30 ஆண்டுகளாக வசிக்கும் 1.5 லட்சம் இலங்கை அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றால் தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விவாத நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக அரசியல், பொது நிர்வாகத்துறை சார்பில் நேற்று நடந்தது. இதில் அரசியல், பொது நிர்வாகத்துறைத் தலைவர் ராமு மணிவண்ணன், மாணவர்கள், இலங்கை அகதிகள், பங்கேற்றனர். விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை அகதிகள் சிலர் பேசியதாவது:கடந்த 30 ஆண்டுகளாக அகதிகளாகவே வாழ்ந்து வருகிறோம். எப்படியும் இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்தோம்.

ஆனால் அகதிகளாக உள்ள எங்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக சிஏஏவில் எதுவும் குறிப்பிடவில்லை. போரில் உயிரை காப்பாற்றிக்கொள்ள இங்கு தப்பி வந்ததால் இலங்கை குடிமகன் என்பதற்கு எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை. அதே போல் இந்திய குடிமகன் என்பதற்கான அரசு ேகட்கும் ஆதாரங்களும் எங்களிடம் இல்லை. இங்கு வழங்கப்பட்ட ஓட்டுனர் உரிமம், இங்கு படித்ததற்கான சான்று, இங்கு பிறந்த குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ் தான் எங்களிடம் ஆவணங்களாக உள்ளது. இலங்கையிலிருந்து அகதியாக தமிழகம் வந்த 1.5 லட்சம் பேரில் 90 சதவீததத்துக்கும் அதிகமானோர் இந்திய குடியுரிமை பெறவே விரும்புகின்றனர். இலங்கை அகதிகள், சிலர் தமிழக பெண்களை திருமணம் செய்துள்ளனர். தமிழர்கள், இலங்கை அகதிகள் முகாமில் உள்ள பெண்களை திருமணம் செய்துள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டால் அந்த குடும்பங்களில் எந்த மாதிரியான பிரச்னைகள் எழும் என தெரியவில்ைல. நன்றாக படிக்கும் இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு கூட, வெளிமாநிலங்களில் தங்கி படிக்க அனுமதிப்பதில்லை. அதனால் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது, இந்த பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

மேலும் சில
  • விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு



  • பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 அறைகள் இடிந்து தரைமட்டம்



  • ஆந்திரா பொன்னிரக நெல் விதை விற்பனையை தடை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்



  • குமரி எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு: திருச்சூருக்கு அழைத்து சென்று தீவிரவாதிகளிடம் விசாரணை



  • சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா



  • திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பலராமன் எம்எல்ஏ இல்ல திருமணம் இன்று நடந்தது: முதல்வர் வாழ்த்து



  • அதிமுக பிரமுகரின் 3 கார்கள் உடைப்பு: வேளச்சேரியில் பரபரப்பு



  • மோடி ஆட்சியால் நாட்டுக்கு பேராபத்து: பாலகிருஷ்ணன் பேச்சு



  • காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில் உள்ள பள்ளிக்கூடத்தில் கழிவுநீர் தேக்கம்



  • காட்டாங்கொளத்தூர் அருகே பரபரப்பு: போர்வெல் பணியை தடுப்பதா?.. திமுக-அதிமுகவினர் வாக்குவாதம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]