குடிபோதை தகராறில் முதியவருக்கு கத்திக்குத்து
1/2/2025 4:43:48 PM
பெரம்பூர்: சென்னை மகாகவி பாரதிநகர், 11வது கிழக்கு குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ெசபாஸ்டீன் (65). கூலி தொழிலாளி. இவரது நண்பர் அன்வர். நேற்று இருவரும் மது அருந்தியுள்ளனர். போதை ஏறியதும் திடீரென அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அன்வர், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ெசபாஸ்டீனை சரமாரி குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த செபாஸ்டீனை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்து மகாகவி பாரதிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து அன்வரை தேடி வருகின்றனர்.