இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வாக்கு பெட்டிகளை பள்ளியில் வைத்து பூட்டிச்சென்ற அதிகாரிகள்

1/1/2025 2:37:15 PM
சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கலங்கல் ஊராட்சி துவக்கப் பள்ளியில் 3வது வார்டு வாக்குச் சாவடி எண் 133ல் நேற்றுமுன்தினம் வாக்குப் பதிவு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப் பெட்டிகளுக்கு அதிகாரிகள்  சீல் வைத்த பின்னர், அதே பள்ளியில் அமைந்துள்ள மேலும் இரண்டு வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்திய பெட்டிகள் மற்றும் உபகரணங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எடுத்துச் சென்றனர்.
தேர்தல் நாளன்று அலுவலர்களுக்கு உணவு வழங்கிய ஓட்டல் கடைக்காரர் பாத்திரங்களில் ஒன்றிரண்டை காணவில்லை என்று நேற்று காலை ஊராட்சி அலுவலரிடம் பள்ளியின் சாவியை வாங்கி வந்து பள்ளியைத் திறந்து பாத்திரங்களை தேடியுள்ளார். அப்போது 133ம் எண் வாக்குச் சாவடி அமைந்திருந்த வகுப்பு அறையில் இருந்த இரண்டு சாக்கு பையை பிரித்து பார்த்த போது இரண்டு வாக்குப் பெட்டிகள் இருந்துள்ளது. இதுபற்றி ஊராட்சி செயலர் சண்முகவேலுவிடம் தெரிவித்துள்ளார். அவர் வந்து பார்த்து விட்டு சூலூர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

இதுபற்றி அறிந்ததும் அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் பள்ளியில் திரண்டதால் பரபரப்பு நிலவியது. மாலை 6 மணி வரை போலீசார் வராததால் அரசியல் கட்சியினர் பள்ளியில் அமர்ந்து தர்ணா செய்தனர். ஊராட்சி செயலர் வகுப்பறையைத் திறந்து வாக்குப் பெட்டிகளை அரசியல் கட்சியினருக்கு காண்பித்தார். அதில் ஓட்டுச் சீட்டுகள் இல்லை, காலி பெட்டியாக இருந்தது. இதன்பிறகு பரபரப்பு அடங்கியது.

மேலும் சில
  • சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு



  • தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா: அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது



  • வங்க கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது; டெல்டா மாவட்டங்கள் அருகே கரையை கடக்க வாய்ப்பு



  • மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி பலி



  • தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்று காலை சவரனுக்கு ரூ.296 குறைவு



  • 3வது நாளாக மிதக்கிறது சென்னை புறநகர்



  • சென்னையில் மழை, புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை, வேளச்சேரியில் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்



  • செம்பரம்பாக்கம் ஏரியில் இரவு நேரத்தில் 9 ஆயிரம் கன அடி திறப்பு தண்ணீர் திறப்பால்: அடையாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீர்



  • கல்பாக்கத்தில் கரையை கடந்தது நிவர்; கிராமங்கள் துண்டிப்பு: 20 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]