இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மகாராஷ்டிரா மாநில முதல்வர் அலுவலகத்தில் பீதி: 3 பாஜ அமைச்சர்களை காலி செய்த அறை எண்: 602

12/31/2019 5:07:40 PM
வருமான வரியில் 6 ஆண்டுகளில் பா.ஜ. அரசு செய்த மாற்றங்கள் நோக்கத்தை சந்தேகிக்க வேண்டாம் மோடி ஒரு 24 காரட் தங்கம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

மும்பை: மகாராஷ்டிர மாநில முதல்வர் அலுவலகத்தில் அறை எண்: 602, ஏற்கனவே 3 பாஜ அமைச்சர்களை காலி செய்ததாக கூறப்படுவதால், துணை முதல்வர் அஜித்பவாரும் அந்த அறைக்கு செல்ல மறுத்து வருகிறார். இதனால், முதல்வர் அலுவலக அதிகாரிகள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவி ஏற்றார். இவருக்கு மகாராஷ்டிர முதல்வர் அலுவலகத்தில் உள்ள அறை எண்: 602 ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் அதனை ஏற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு பெரிய கதை உள்ளதாக முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூறுகின்றனர்.

முதல்வர் அலுவலகத்தின் 6வது மாடியில் 3,000 சதுரஅடியில் உள்ள அறை எண்: 602-ல் பிரம்மாண்ட கூட்ட அரங்கம், உட்புற கேபின், அலுவலக ஊழியர்களுக்கு தனி அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த 6வது மாடி தான் அரசின் அதிகார மையம். காரணம், இங்கு வழக்கமாக முதல்வர், இதற்கடுத்த இடத்தில் இருக்கும் மூத்த அமைச்சர், தலைமை செயலாளர் ஆகியோரின் அலுவலகங்கள் இருக்கும். கடந்த 2014ம் ஆண்டு பாஜகவின் சிறுபான்மை, வருவாய் துறை அமைச்சர் ஏக்நாத் காத்சேவிற்கு 602ம் எண் அறை ஒதுக்கப்பட்டது. ஆனால் இவர், சட்டவிரோத நில அபகரிப்பு வழக்கில் சிக்கி அடுத்த 2 ஆண்டுகளில் தனது பதவியை இழந்தார்.

அதன்பின், ஒருமாதம் அந்த அறை காலியாக இருந்தது. எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத நிலையில், விவசாயத்துறை அமைச்சர் பாண்டுரங் பண்ட்கருக்கு ஒதுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், மே 2018ல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதன்பிறகு நடப்பாண்டு ஜூன் வரை அறை எண்: 602 காலியாகவே இருந்தது. தொடர்ந்து பாஜக அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அனில் பாண்டேவிற்கு விவசாயத்துறை அளிக்கப்பட்டது.
இவர், அறை எண் 602-ல் இருந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி அக்டோபரில் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இவருக்கு என்ன சோதனை என்றால், விதர்பாவின் மோர்ஷி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இப்படியாக, 3 அமைச்சர்களை காலி செய்த இடம்தான் அறை எண்: 602. இந்நிலையில், முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்புக்கு பின்னர். அவருடன் பதவியேற்ற 6 அமைச்சர்களும்கூட இந்த அறையில் தங்கள் பணிகளை மேற்கொள்ளவில்லை. இவர்கள் யாருக்கும் அறை எண் 602 ஒதுக்கப்படவில்லை.

தற்போது, மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதால், இரண்டாவது மூத்த அமைச்சர் மற்றும் துணை முதல்வர் என்ற அடிப்படையில் அஜித் பவார் தான், அறை எண் 602-க்கு செல்ல வேண்டும். ஆனால், அவருக்கு முதல் மாடியில் இருக்கும் அறை தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாலும், பாஜகவுடன் சேர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் துணை முதல்வராக பதவியேற்ற 80 மணி நேரத்தில் பதவியை இழக்க வேண்டியிருந்ததால், இவரும் அறை எண்: 602-க்கு செல்வதை தவிர்த்து வருகிறார்.

இதுமற்றுமின்றி கடந்த 2014ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆட்சியின் போது அஜித் பவார் துணை முதல்வராக இருந்தார். அப்போது அறை எண் 602ல் ஓராண்டு மட்டும் இருந்தார். இந்த அறையில் இதுவரை யாரும் தங்கள் பதவிக் காலத்தை முழுமையாக அனுபவிக்கவில்லை. அதனால், அஜித் பவாரும் அந்த அறையை ஏற்க மாட்டார் என்றே முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூறுகின்றனர். இருந்தாலும், அஜித் பவாருக்கு பெரிய அறை தேவைப்படும் என்பதால், அறை எண் 602-க்கே ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக, அதிகாரிகள் தெரிவிப்பதால் முதல்வர் அலுவலகம் பெரும் குழப்பத்தில் உள்ளது.

மேலும் சில
  • வருமான வரியில் 6 ஆண்டுகளில் பா.ஜ. அரசு செய்த மாற்றங்கள்



  • நோக்கத்தை சந்தேகிக்க வேண்டாம் மோடி ஒரு 24 காரட் தங்கம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு



  • 2020-2021ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு



  • குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது



  • ஜாமியா பல்கலைக்கழக வன்முறை: 70 பேரின் புகைப்படம் வெளியீடு... டெல்லி காவல்துறை அறிவிப்பு



  • அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் சபர்மதிக்கு டிரம்ப் வருகை: குஜராத் முதல்வர் தகவல்



  • டெல்லி பள்ளிகள் தொடர்பாக போலி வீடியோ பகிர்ந்த அமித்ஷா: தடை விதிக்க ஆம்ஆத்மி புகார்



  • டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு மம்தா கட்சி ஆதரவு: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவில்லை



  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: நாளை மறுநாள் மத்திய பட்ஜெட்



  • டிவி செய்தி ஆசிரியரிடம் வம்பிழுத்த காமெடி நடிகர் எங்க விமானத்தில் 6 மாசத்துக்கு ஏறாதீங்க..! 2 விமான நிறுவனங்கள் தடை விதித்ததால் பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]