இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அமித்ஷா குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணனுக்கு போலீஸ் வலை

12/31/2019 4:45:29 PM
விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா

நெல்லை: பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாக பேசிய காங்கிரஸ் பிரமுகரும் பேச்சாளருமான நெல்லை கண்ணனை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், அவரை உடனே கைது செய்ய வலியுறுத்தி டவுனில் அவரது வீட்டு முன்பு பா.ஜ. மற்றும் இந்து அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அவதூறாக பேசி, இரு பிரிவினரிடையே மோதலையும், பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசிய நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர போலீஸ் கமிஷனரிடம் பாஜ சார்பில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது. மேலும் சென்னையில் டிஜிபி அலுவலகத்திலும் பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா, நெல்லை கண்ணன் மீது வழக்குபதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்திருந்தார். இதுபோல் தச்சநல்லூர், மேலப்பாளையம், டவுன், பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அவதூறு பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்ய பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்பேரில் மேலப்பாளையம் போலீசார், நெல்லை கண்ணன் மீது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும், உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசியதாகவும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் நெல்லை கண்ணனை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தாமோர் உத்தரவின் பேரில் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி அவரது வீட்டு முன்பு பா.ஜ. மாநில இளைஞரணி செயலாளர் வேல்ஆறுமுகம், எஸ்சி அணி மாநில துணைச் செயலாளர் முருகதாஸ் ஆகியோர் தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

அவர்களிடம் டவுன் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். அவரை கைது செய்யும் வரை வீட்டை விட்டு நகர மாட்டோம் என்று கூறி வீட்டு முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையிலும் பாஜ சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

மேலும் சில
  • விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு



  • பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 அறைகள் இடிந்து தரைமட்டம்



  • ஆந்திரா பொன்னிரக நெல் விதை விற்பனையை தடை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்



  • குமரி எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு: திருச்சூருக்கு அழைத்து சென்று தீவிரவாதிகளிடம் விசாரணை



  • சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா



  • திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பலராமன் எம்எல்ஏ இல்ல திருமணம் இன்று நடந்தது: முதல்வர் வாழ்த்து



  • அதிமுக பிரமுகரின் 3 கார்கள் உடைப்பு: வேளச்சேரியில் பரபரப்பு



  • மோடி ஆட்சியால் நாட்டுக்கு பேராபத்து: பாலகிருஷ்ணன் பேச்சு



  • காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில் உள்ள பள்ளிக்கூடத்தில் கழிவுநீர் தேக்கம்



  • காட்டாங்கொளத்தூர் அருகே பரபரப்பு: போர்வெல் பணியை தடுப்பதா?.. திமுக-அதிமுகவினர் வாக்குவாதம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]