கணினி பயிற்றுநர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 5ம் தேதிக்குள் பதிவேற்றம்
12/3/2025 4:40:28 PM
சென்னை; கணினி பயிற்றுநர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட நபர்கள் 5ம் தேதிக்குள் தங்களின் உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கணினி பயிற்றுநர் நிலை 1க்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் 23ம் தேதியும் 27ம் தேதியும் நடந்தது. இந்த தேர்வுக்கான ரிசல்ட் நவம்பர் 25ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட நபர்களின் தேர்வு எண், விவரப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் நவம்பர் 28ம் தேதி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர உள்ளவர்கள் தங்களின் சான்றிதழ்களை டிசம்பர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.