இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அம்பத்தூர் அருகே கார் உருண்டு கவிழ்ந்து ஒருவர் பலி: 2 பேர் படுகாயம்

11/6/2025 4:01:56 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் தாம்பரம் புறவழி சாலையில் ஒரு கார் உருண்டு கவிழ்ந்தது. இதில் ஒருவர் பலியானார். மற்ற  இருவரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை திருவேற்காடு அருகே வடநூம்பல் பிரதான சாலையை சேர்ந்தவர் லோகேஷ்ராஜ் (34). தனியார் நிறுவன ஊழியர். இவரது நெருங்கிய  நண்பர்கள், பம்மலை சேர்ந்த ராம் (24), குரோம்பேட்டை, ராதா நகரை சேர்ந்த சத்தியபிரகாஷ் (32). இருவரும் தனியார் நிறுவன ஊழியர்கள்.

இந்நிலையில், வடநூம்பல் பகுதியில் இருந்து நேற்றிரவு லோகேஷ்ராஜ் தனது நண்பர்களை பார்ப்பதற்காக தாம்பரத்துக்கு காரில் சென்றுள்ளார். பின்னர்  அங்கு தனது 2 நண்பர்களுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து, இன்று அதிகாலை 3 மணியளவில் தாம்பரம் புறவழி சாலை  வழியே லோகேஷ்ராஜ் மற்றும் 2 நண்பர்களும் புழல் பகுதிக்கு நோக்கி காரில் வந்துள்ளனர். இவர்கள் அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பம் சுங்கசாவடி பகுதி அருகே காரில் வந்தனர். அப்போது லோகேஷ்ராஜ் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை  இழந்து, சாலையில் கவிழ்ந்து உருண்டு சென்றுள்ளது. பின்னர் அந்த கார், சாலையோரம் நின்றிருந்த லாரிமீது வேகமாக மோதியது.

  இதில் காருக்குள் சிக்கி லோகேஷ்ராஜ், ராம், சத்தியபிரகாஷ் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதுகுறித்து  தகவலறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். அங்கு படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு, ஸ்டான்லி  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே லோகேஷ்ராஜ் இறந்து போனதாக தெரிவித்தனர். மேலும், படுகாயம் அடைந்த ராம்,  சத்தியபிரகாஷ் ஆகிய இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்புகாரின்பேரில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்



  • கோயில் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



  • காயலான் கடையில் மாமூல் வசூல் போலி போலீஸ்காரர் பிடிபட்டார்: ஐடி கார்டு, டம்மி வாக்கிடாக்கி பறிமுதல்



  • சபரிமலையில் 12 நாளில் ஆறரை லட்சம் பேர் தரிசனம்: ரூ.31 கோடி காணிக்கை வசூல்



  • ஹாங்காங்கில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கக்கட்டிகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்



  • சாலை, கால்வாய் வசதி கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு



  • தமிழகத்தில் அடுத்த 4 நாள் இடியுடன் கனமழை பெய்யும்



  • விழாக்கோலம் பூண்டது மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் இன்று மாலை பதவியேற்பு: மு.க.ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு



  • பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தம்



  • செங்கல்பட்டு புதிய மாவட்டம் நாளை உதயம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]