இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

திருத்துறைப்பூண்டி அருகே காங்.பிரமுகர் மனைவி: கழுத்தறுத்து கொலை...சலவை தொழிலாளி கைது

11/5/2025 3:43:15 PM
8 ஆண்டுகளாக நலிந்த வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தவில்லை: பாரபட்சம் காட்டும் தமிழக அரசு கூட்டணியில் இருந்து கொண்டே விமர்சனம்: பாமக மீது அதிமுக தலைவர்கள் கடும் அதிருப்தி

திருத்துறைப்பூண்டி: காங்கிரஸ் பிரமுகர் மனைவியை கொலை செய்துவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற சலவை தொழிலாளி கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதாவனத்தை சேர்ந்தவர் ராமசந்திரன்(70). இவர் காங்கிரஸ் பிரமுகர். இவரது மனைவி  ராஜேஸ்வரி (65). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். நேற்று மாலை ராமச்சந்திரன் சொந்த வேலையாக திருத்துறைப்பூண்டி வந்துவிட்டார். 6.45 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரி  கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருத்துறைப்பூண்டி போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.  அப்போது ஆண் பயன்படுத்தும் ஒரு ஜோடி செருப்பு வீட்டு வாசலில் கிடந்தது.

 விசாரணையில், அந்த செருப்பு திருத்துறைப்பூண்டி வாளமாபுரத்தை  சேர்ந்த சலவை தொழிலாளியான முருகானந்தம் (36) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. ராமசந்திரன் உடுத்தும் ஆடைகளை  முருகானந்தம் தான் சலவை செய்து கொடுப்பார். இதனால் ராமசந்திரன் வீட்டுக்கு முருகானந்தம் அடிக்கடி வருவார். நேற்று அவர் வந்தபோது   ராஜேஸ்வரி பீரோவை திறந்து அதில் பணத்தை வைத்துள்ளார். இதைப்பார்த்த முருகானந்தம் பணத்துக்கு ஆசைப்பட்டு, வீட்டில் இருந்த கத்தியை  எடுத்து ராஜேஸ்வரியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, பீரோவில் இருந்த பணத்தை எடுத்துச்சென்று விட்டதாக போலீஸ் தரப்பில்  கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று இரவு திருத்துறைப்பூண்டியில் முருகானந்தத்தை போலீசார் கைது செய்தனர். எவ்வளவு பணத்தை திருடிச்சென்றார் என்பது பற்றி  அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

படம் பார்த்த கொலையாளி:  ராஜேஸ்வரியை கொலை செய்து விட்டு, பணத்தை திருடிச்சென்ற முருகானந்தம் தனது வீட்டுக்கு செல்லாமல் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு  தியேட்டருக்கு சென்று கைதி படம் பார்த்துள்ளார். படம் முடிந்து பைக்கில் வீடு திரும்பிய போது தான், போலீசார் அவரை வழிமறித்து கைது  செய்தனர்.

மேலும் சில
  • இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை



  • மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள்



  • கொலை வழக்கில் விடுதலையான உடனே காரில் இருந்து இறக்கி ரவுடியை வெட்டி சாய்த்தனர்: புதுவையில் பயங்கரம்



  • ஏடிஎம் கார்டு நம்பரை கேட்டு எஸ்.ஐ.யிடம் ரூ.1 லட்சம் சுருட்டல்



  • போன் செய்தால் போதும்; நேரில் வரும்: வண்ணையில் 5 கிலோ கஞ்சா, ஆட்டோ பறிமுதல்



  • காதல் தோல்வியால் விபரீதம் கல்லூரி முன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து மாணவி தற்கொலை



  • 7 வயது சிறுவனை கடத்திய 10ம் வகுப்பு மாணவன் கைது



  • கைகளை கோர்த்துக் கொண்டு ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை



  • இளம்பெண்ணை குத்திக் கொன்ற 4 பேருக்கு ஆயுள்தண்டனை



  • பூரி கட்டையால் சரமாரி அடித்து மனைவியை கொன்ற கணவன் கைது: திருவொற்றியூரில் பயங்கரம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]