இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி - அம்பாள் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம்

11/4/2025 3:13:55 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் இன்று அதிகாலை திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 28ம்தேதி தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு யாகசாலை பூஜை,  சிறப்பு தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் மாலை திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் சூரனை ஜெயந்திநாதர் வதம் செய்தார்.

7ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட  அபிஷேகமும் அதன்பின்னர் தீபாராதனை நடந்தது. அதிகாலை 5.15 மணிக்கு கோயிலிலிருந்து தெய்வானை தபசு காட்சிக்கு புறப்பட்டார். வீரராகவபுரம்  தெரு, தெற்கு ரதவீதி வழியாக தெப்பக்குளம் அருகேயுள்ள தபசு மண்டபத்தில் வந்திறங்கினார். மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான், கோயிலிலிருந்து புறப்பட்டு தபசு மண்டபத்தில் தெய்வானைக்கு காட்சி கொடுத்தார். பின்னர் தெற்கு  ரதவீதி மேல ரதவீதி சந்தியில் தோள்மாலை மாற்றும் வைபவத்தை தொடர்ந்து தீபாராதனை நடந்தது.

பின்னர் இரவு 11.30 மணிக்கு சுவாமி கோயிலை வந்தடைந்தார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. வசந்த மண்டபத்தில் அம்பாளுக்கு  அலங்காரம் நடந்தது. அதன்பின்னர் மேலக்கோபுர வாசலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு சுவாமியும், அம்பாளும் வந்தனர். அங்கு  ஹோமங்கள் நடந்தது. பின்னர் அம்பாள் கோயிலில் எழுந்தருளியதும், சுவாமி கோயிலில் உள்ள அம்மன்களுக்கு தாலி கட்டினார். மீண்டும் இருவரும்  திருமண மண்டபத்தில் எழுந்தளுளினர். அங்கு இன்று அதிகாலை 1.30 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக  முறைப்படி வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மொய்  எழுதி பிரசாதம் பெற்றனர்.

மேலும் சில
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்



  • கோயில் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



  • காயலான் கடையில் மாமூல் வசூல் போலி போலீஸ்காரர் பிடிபட்டார்: ஐடி கார்டு, டம்மி வாக்கிடாக்கி பறிமுதல்



  • சபரிமலையில் 12 நாளில் ஆறரை லட்சம் பேர் தரிசனம்: ரூ.31 கோடி காணிக்கை வசூல்



  • ஹாங்காங்கில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கக்கட்டிகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்



  • சாலை, கால்வாய் வசதி கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு



  • தமிழகத்தில் அடுத்த 4 நாள் இடியுடன் கனமழை பெய்யும்



  • விழாக்கோலம் பூண்டது மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் இன்று மாலை பதவியேற்பு: மு.க.ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு



  • பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தம்



  • செங்கல்பட்டு புதிய மாவட்டம் நாளை உதயம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]