இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கேரளாவில் 4 நாட்கள் கனமழை: கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’

10/21/2019 3:30:24 PM
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் 4 நாட்களுக்கு கன மழை பெய்யும் என திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி ைமயம் அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று திருவனந்தபுரம், எர்ணாகுளம் உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்ைக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அடுத்த 4 நாட்களுக்கு பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு நேற்று ‘ஆரஞ்சு எச்சரிக்ைக’ விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கனமழை தொடரும் என்பதால் இன்று திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கும், நாளை எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும் ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. இன்று கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு மாவட்டங்களிலும், நாளை (22ம் ேததி) கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களிலும், 23ம் தேதி கொல்லம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம். கோழிக்ேகாடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களிலும், 24ம் தேதி மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களிலும் ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் மலைப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ேநற்று தொடங்கிய மழை இன்று விடிய விடிய தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் திருவனந்தபுரம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, எர்ணாகுளம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் இன்று பிற்பகலுக்கு பின்னர் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது



  • திருக்குவளையில் கருணாநிதி சிலை மு.க.ஸ்டாலின் 7ம் தேதி திறக்கிறார்



  • மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல்



  • மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்



  • கடலூர் அருகே பயங்கரம்; மாஜி பஞ். தலைவரின் தம்பி படுகொலை: 25 படகுகளுக்கு தீ வைப்பு



  • தமிழகம் முழுவதும் ஆகஸ்டு மாத முதலாவது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; விதிகளை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு



  • தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது குவியும் புகார்கள்: ஏடிஎஸ்பி விசாரணை



  • பிளஸ் 1 பொது தேர்வு முடிவு வெளியீடு: 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி



  • அண்ணா சிலைக்கு காவி துணி அணிவிப்பு: கன்னியாகுமரியில் பரபரப்பு



  • மத்திய அரசு கட்டுப்பாடுகள் தளர்த்தியுள்ள நிலையில் தமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]