இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: சிக்சர் மழையால் புதிய உலக சாதனை: ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா

10/21/2019 3:12:31 PM
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

ராஞ்சி: இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே விசாகப்பட்டினம் மற்றும் புனேவில் நடந்த முதல் இரண்டு டெஸ்டிலும், இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் ராஞ்சியில் நடக்கும் மூன்றாவது டெஸ்டிலும் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 497 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. தென் ஆப்ரிக்கா அணி 488 ரன்கள் பின்தங்கி உள்ளது. நேற்றைய போட்டியில், இந்திய பேட்ஸ்மேன்கள் சிக்சர் மழை பொழிந்ததால், புதிய உலக சாதனையை இந்திய அணி அரங்கேற்றி உள்ளது.

இந்திய அணி வீரர்கள் இந்த தொடரில் மொத்தமாக இதுவரை 47 சிக்சர்களை பறக்கவிட்டனர். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில், ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய ஆஸ்திரேலிய அணியின் (இங்கிலாந்துக்கு எதிராக 40 சிக்சர்கள்) உலக சாதனையை இந்திய அணி முறியடித்தது. அதன்படி, ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய அணிகள் பட்டியலில், இந்தியா - 47 சிக்சர்கள் (எதிர் - தென் ஆப்ரிக்கா - 2019), ஆஸ்திரேலியா - 40 சிக்சர்கள் (எதிர்- இங்கிலாந்து - 2013), பாகிஸ்தான் - 37 சிக்சர்கள் (எதிர் - இந்தியா - 2005), இங்கிலாந்து - 36 சிக்சர்கள் (எதிர்- ஆஸ்திரேலியா - 2005) என்ற நிலையில் உள்ளது.

முன்னதாக வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி - எல்கரையும், உமேஷ் யாதவ் - குயிண்டன் டி காக்கையும் அவுட்டாக்கினர். இருவருமே பவுண்சரில் விக்கெட் கைப்பற்றினர். அபூர்வமாக நடந்த நிகழ்வு குறித்து, கிரிக்கெட் விமர்சகர் கவாஸ்கர் கூறுகையில், ‘‘இந்திய ஆடுகளத்தில் இப்படி ஒரு மாற்றமா? பொதுவாக இந்திய ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் இரண்டாவது நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியின் 2 விக்கெட்டையும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றியுள்ளனர். குறிப்பாக தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் அவுட்டான விதம், மிகவும் ஆச்சரியமாக உள்ளது. என் கண்ணையே என்னால் நம்பமுடியவில்லை’’ என்றார்.

மேலும் சில
  • அப்பாடா....எனக்கு கொரோனா இல்லை: கேன் ரிச்சர்ட்சன் மகிழ்ச்சி



  • விளையாட்டு உலகை முடக்கியது கொரோனா: பிரெஞ்ச் ஓபன் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு



  • ஸ்டெம்புகளுக்கு பின்னால்.... தோனி அணியின் மிகப்பெரிய சொத்து: வாசிம் ஜாபர் பேட்டி



  • கிரிக்கெட் விளையாட்டை காட்டிலும் வாழ்க்கையில நிறைய விஷயம் இருக்கு..! பாகிஸ்தானில் இருந்து ஆஸி. வீரர் ஓட்டம்



  • இத்தாலி முழுவதும் மூடப்பட்ட நிலையில் சென்னை திரும்பினார் வாள்வீச்சு வீராங்கனை



  • இந்தியாவில் கங்குலியை பாருங்க என்னமா உசரத்துக்கு வந்துட்டார்..! பாக். வாரியத்தை வறுத்தெடுக்கும் அக்தர்



  • கொரோனா தொற்றை தவிர்க்க கைகளை கழுவுவது எப்படி?.... சச்சின் வெளியிட்ட வீடியோ வைரல்



  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிபோனது ‘கோபா’, ‘யூரோ’



  • ஒலிம்பிக்கை ஓராண்டுக்கு ஒத்திவையுங்க..! அமெரிக்க அதிபர் வேண்டுகோள்



  • கொரோனா பீதி: சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அடுத்தடுத்து ரத்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]