5 வயது சிறுமி பலாத்காரம்: 5 மனைவிகளின் கணவர் கைது
9/12/2025 2:49:44 PM
திருப்பத்தூர்: ஐந்து மனைவிகளின் கணவரான தொழிலாளி, தனது மகளையே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர் ஷான்பாஷா(50), கூலித்தொழிலாளி. இவருக்கு 5 மனைவிகள். 5வது மனைவிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் நேற்று வெளியே விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது ஷான்பாஷா, மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றபிறகு சிறுமியை திடீரென பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டுக்குள் வந்த சிறுமியின் தாய் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இவரது சத்தம் கேட்ட அப்பகுதியினர் ஓடிவந்தனர். இதை பார்த்த ஷான்பாஷா தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவத்தால் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷான்பாஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5வயது மகளை, தந்தையை சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.