இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

இல்லற வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக குழந்தையை கொன்றவர் கைது

9/11/2025 2:59:52 PM
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல் மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்

புழல்: புழல் பகுதியில் தனது இல்லற வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக கருதி, மனைவியின் குழந்தையை கொன்ற வாலிபரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை வியாசர்பாடி, கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (27). இவருக்கு மனைவி பவானி (24), மகள் யாழினி (3), மகன் ராஜேஷ் (1) ஆகியோர் உள்ளனர். இதற்கிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன் இத்தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

பின்னர் புழல், கண்ணப்பசாமி நகர், 14-வது தெருவில் தனது 2 குழந்தைகளுடன் பவானி தனியே வசித்து வந்தார். அப்போது சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஆசிப் (25) என்ற வாலிபரை பவானி 2-வது திருமணம் செய்து, ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி பவானியின் மகள் யாழினி இறந்து போனதாக முன்னாள் கணவருக்கு தகவல் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கடந்த 8-ம் தேதி புழல் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, யாழினியின் சடலத்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே 2-வது கணவரான ஆசிப் தலைமறைவானார். பவானியிடம் விசாரித்தபோது, தனது இல்லற வாழ்க்கைக்கு யாழினி இடையூறாக இருப்பதாக ஆசிப் கூறிவந்தது தெரியவந்தது. இந்நிலையில், தலைமறைவான ஆசிப் கொடுங்கையூரில் இருப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தனது மனைவியுடன் உல்லாசமாக இருப்பதற்கு யாழினி இடையூறாக இருந்ததால் கழுத்தை நெரித்து கொன்றதாக ஆசிப் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை இன்று காலை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் சில
  • திருத்தணி அருகே பணம் வசூலிக்க சென்ற பெண் விஷம் ஊற்றி கொடூர கொலை: சவுக்குத் தோப்பில் சடலம் மீட்பு



  • அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம்: நடிகர் ஷாம் உள்பட 13 பேர் அதிரடி கைது



  • மதுரை ஜிஹெச்சில் பயங்கரம்; நோயாளி சரமாரி வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்



  • காதல் திருமணம் செய்ததால் இளம்பெண் காரில் கடத்தல்: தந்தை, தாய் உட்பட 3 பேர் மீது வழக்கு



  • வெடிகுண்டு வீசியும் சரமாரி வெட்டியும் பிரபல ரவுடி படுகொலை: புதுச்சேரியில் பயங்கரம்



  • வேளச்சேரி அருகே கால்டாக்சி டிரைவர் வெட்டி கொலை: ஒருவர் கைது



  • ‘கள்ளக்காதலி மாதிரி நீ அழகாக இல்லை’ புதுப்பெண்ணை அடித்து சித்ரவதை: கொடூர இன்ஜினியர் கைது



  • ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து அனகாபுத்தூரில் கஞ்சா விற்பனை; 4 பேர் கைது



  • ஆவடி அருகே மீன் வியாபாரி கொடூர கொலையில் 3 பேர் கைது: பிரபல ரவுடிக்கு வலை



  • திருமுல்லைவாயலில் இன்று காலை மீன் வியாபாரி சரமாரி வெட்டி படுகொலை: 2 நண்பர்களுக்கு வலை வீச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]