ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை
9/5/2025 3:35:07 PM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, சண்முகசிகாமணிநகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் ராஜா (27). ஆட்டோ டிரைவரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டிருந்தார். இவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சக்தி வெங்கடேஷ் (22), அந்தோணிராஜ் (29), மாரிமுத்து (24), தங்கராஜ் (24), சுடலைமணி (27). ராஜாவுக்கும் சக்தி வெங்கடேஷ் தரப்பினருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 8.6.2025 அன்று இரவு போதையில் வந்த ராஜாவை, சக்தி வெங்கடேஷ் உள்ளிட்டவர்கள் அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி ராஜாவை கொலை செய்தனர். சக்தி வெங்கடேஷ் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த தூத்துக்குடி மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பி.எஸ். கவுதமன், சக்தி வெங்கடேஷ், அந்தோணிராஜ் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.