கண்ணூர் விமான நிலையத்தில் 11.29 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: 4 பேர் அதிரடி கைது
8/20/2019 4:47:15 PM
திருவனந்தபுரம்: கண்ணூர் விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 11.29 கிலோ தங்க பிஸ்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.
கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, ேகாழிக்கோடு, கண்ணூர் ஆகிய விமான நிலையங்கள் வழியாக தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக துபாய், பக்ரைன், சார்ஜா உள்பட வளைகுடா நாடுகளில் இருந்து அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. சுங்க லாகா மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டும் தங்கம் கடத்துவது குறையவில்லை.
இந்த நிலையில் நேற்று கண்ணூர் விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே கண்ணூருக்கு வந்த அனைத்து சர்வதேச விமான பயணிகளிடமும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் இருந்த பயணிகளிடம் சோதனையிட்டபோது 4 பேர் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து மொத்தம் 11.29 கிலோ தங்க பிஸ்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ.4.15 கோடியாகும். விசாரணையில் அவர்கள் வயநாட்டை சேர்ந்த அர்ஷாத், கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல்லா, அம்சீர், பெங்களூருவை சேர்ந்த பஷீர் ஆகியோர் என தெரியவந்தது. அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர்.