இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கேரளாவில் மழைக்கு 5 நாளில் 89 பேர் பலி: 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’

8/13/2019 3:21:05 PM
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 5 நாளில் கன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது. மழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று முதல்வர் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். கேரளாவில் கடந்த 2 வாரமாக பெய்து வந்த கனமழை நேற்று சற்றே ஓய்ந்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட மலப்புரம் மாவட்டம் கவளப்பாறை, வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே புத்துமலை ஆகிய பகுதிகளில் நேற்று தொடர்ந்து உடல்களை தேடும் பணி நடந்தது. இதில் கவளப்பாறையில் 6 உடல்கள் மீட்கப்பட்டன. புத்துமலையில் நேற்று உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மலப்புரம் மாவட்டம் கோட்டக்குன்னு பகுதியில் ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. திருச்சூரில் மீன்பிடிப்பதை வேடிக்கை பார்க்க சென்ற கணவன், மனைவி உள்பட 4 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். இதையடுத்து நேற்று மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. அதே வேளையில் கடந்த 5 நாட்களில் பலியானோர் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது. கவளப்பாறையில் மண்ணுக்கடியில் சிக்கியதாக கருதப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அருகில் உள்ள அவர்களது உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. தற்போதைய கணக்குப்படி 40 பேர் மண்ணில் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதேபோல புத்துமலையில் 7 பேர் சிக்கி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அவர்களை தேடும் பணி இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க கேரளாவில் இன்றும் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மழை குறைந்து உள்ளதால் கேரளாவில் ‘ரெட் அலர்ட்’ வாபஸ் பெறப்பட்டு உள்ளது. ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு, கண்ணூர் ஆகிய 6 மாவட்டங்களில் மட்டும் ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே வெள்ளம் பாதித்த மலப்புரம், வயநாடு மாவட்டங்களை இன்று முதல்வர் பினராயி விஜயன் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். இதையடுத்து ெவள்ள நிவாரண முகாம்களுக்கு செல்லவும் முதல்வர் திட்டமிட்டு உள்ளார். கேரளா முழுவதும் வெள்ள நிவாரண முகாம்களில் சுமார் 2.75 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



  • ஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்; ரூ15 கோடிக்கு மேல் வரம்பின்றி செல்லும் குதிரை பேரம்: முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]