சென்னையில் நடக்கும் கலைஞரின் முதலாமாண்டு நினைவஞ்சலியில் திரளாக கலந்து கொள்ளவேண்டும்: கும்மிடிப்பூண்டி கி.வேணு அறிக்கை
8/6/2025 4:37:04 PM
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி கி. வேணு விடுத்துள்ள அறிக்கை: தலைவர் கலைஞரின் முதலாமாண்டு நினைவஞ்சலி மற்றும் அமைதி பேரணி நாளை நடக்கிறது. சென்னை அண்ணா சிலையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை நடக்கும் பேரணியில் திமுகவினர் பங்கேற்கின்றனர். அன்று மாலை 5 மணியளவில் முரசொலி வளாகத்தில் கலைஞர் சிலை திறப்பு விழாவும், சென்னை ஒய்எம்சிஏ திடலில் நடக்கும் மாபெரும் பொதுக்கூட்டமும் நடக்கிறது. கூட்டத்துக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசுகிறார்.
எனவே, திருவள்ளூர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநில, மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, வட்ட கழக இந்நாள், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்பாளர்கள், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, வழக்கறிஞரணி, விவசாய அணி, விவசாய தொழிலாளரணி, இலக்கிய அணி, மீனவரணி, சிறுபான்மையினர் நலப்பிரிவு அணி, ஆதி திராவிட நல அணி, வர்த்தகரணி, மகளிர் தொண்டரணி, தொண்டரணி, நெசவாளரணி, மருத்துவ அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, பொறியாளர் அணி, தகவல் தொழில் நுட்ப அணியினர் அலைகடலென திரண்டு வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.