இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கண்மாயில் குண்டு வெடித்ததில் 2 மாணவர்கள் படுகாயம்: ராமநாதபுரத்தில் பரபரப்பு

7/29/2019 3:14:30 PM
சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சாயல்குடி: கண்மாயில் கிடந்த 2 வெடிகுண்டுகள் வெடித்ததில் 2 மாணவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள ஆத்திக்குளத்தை சேர்ந்த பாலமுருகனின் மகன் சூர்யா(8). அதே பகுதியை சேர்ந்த செந்திலின் மகன் வினித்(8). இருவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று மாலை இருவரும் அப்பகுதியில் உள்ள கண்மாய்க்கு விளையாட சென்றனர். தற்போது அந்த கண்மாயில் தூர் வாரும் பணி நடந்து வருகிறது. கண்மாயில் அவர்கள் விளையாடி கொண்டிருந்த போது, நூலால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்த 2 பொருட்களை கண்டெடுத்தனர். அந்த பொருட்களை வைத்து அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென அவை வெடித்து சிதறின. இதில் சிறுவர்கள் 2 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து வந்த முதுகுளத்தூர் டிஎஸ்பி ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் ெவடித்து சிதறியவை சிறிய ரக வெடிகுண்டுகள் என தெரிந்தது. இது தொடர்பாக  வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு வெடித்ததில் மாணவர்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. டிஎஸ்பி ராஜேஷ் கூறுகையில், ‘‘அதிக சத்தத்துடன் வெடிக்கும் வகையில் இந்த வெடி குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சுமார் 10 வருடங்களுக்கு முன்பு கண்மாயில் இந்த வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. கண்மாயில் மேலும் வெடிகுண்டுகள் உள்ளனவா என்று மோப்பநாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தேடினோம். ஆனால் வேறு எதுவும் கிடைக்கவில்லை’’ என்றார்.

மேலும் சில
  • சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு



  • தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா: அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது



  • வங்க கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது; டெல்டா மாவட்டங்கள் அருகே கரையை கடக்க வாய்ப்பு



  • மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி பலி



  • தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்று காலை சவரனுக்கு ரூ.296 குறைவு



  • 3வது நாளாக மிதக்கிறது சென்னை புறநகர்



  • சென்னையில் மழை, புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை, வேளச்சேரியில் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்



  • செம்பரம்பாக்கம் ஏரியில் இரவு நேரத்தில் 9 ஆயிரம் கன அடி திறப்பு தண்ணீர் திறப்பால்: அடையாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீர்



  • கல்பாக்கத்தில் கரையை கடந்தது நிவர்; கிராமங்கள் துண்டிப்பு: 20 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]