காஞ்சிபுரம் கிருஷ்ணா கல்லூரியில் முதலாண்டு வகுப்பு தொடக்கம்
6/27/2019 3:53:32 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நேற்று நடந்தது. கல்லூரி நிறுவனர் போஸ் தலைமை தாங்கினார். முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை தாளாளர் அரங்கநாதன், தலைவர் மனோகரன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மோகன ரங்கன் முன்னிலை வகித்தனர்.
மோகனரங்கன் கூறுகையில், “கல்லூரியின் 26 ஆண்டுகால வளர்ச்சி, சிறப்பம்சங்கள், பாடப் பிரிவுகள், மாணவர்களின் வேலைவாய்ப்பு, பஸ் வசதி, கிராமப்புற ஏழை, எளியோர் கல்வி பயில மிகவும் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கும் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வில் ஆண்டு தோறும் மாணவர்கள் அதிக சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற திறன்மிக்க பேராசிரியர்களை கொண்டு நடத்தப்படும் சிறப்புமிக்க கல்லூரி, ஒழுக்கம், பண்பாடு, நன்நடத்தைகள் பின்பற்றக்கூடிய கல்லூரி இது”என்றார். விழாவில், பல்கலைக்கழக தேர்வில் துறைவாரியாக முதல் தரம்பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. துணை முதல்வர் பிரகாஷ் நன்றி கூறினார்.