குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி ஆவடியில் திமுக ஆர்ப்பாட்டம்
6/27/2019 3:51:13 PM
ஆவடி: ஆவடி மாநகராட்சியில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி, ஆவடி மாநகர திமுக சார்பில், இன்று காலை 10 மணியளவில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் துவக்கிவைத்து கண்டன உரையாற்றினார்.
பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, ஆவடி மாநகர செயலாளர் ஜி.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் நடுக்குத்தகை ரமேஷ், காயத்ரி தரன், ஒன்றிய செயலாளர்கள் பூவை.ஜெயக்குமார், டி.தேசிங்கு, மாநில மாணவரணி துணை செயலாளர் பூவை ஜெரால்டு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நாராயணபிரசாத், பொதுக்குழு உறுப்பினர் ராஜி, ஆவடி மாநகர நிர்வாகிகள் ருக்கு, சவுந்தர், பேபி சேகர், நளினி கோபி, சண்.பிரகாஷ், கலைசேகர், வக்கீல் சேகர், பொன்விஜயன், ஆவடி செல்வா, பதாகை வீரராகவன், புரட்சிதாசன், ஹாஜா ஷெரீப், யுவராஜ், கனகராஜ் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தண்ணீர் பிரச்னையை தீர்க்காத தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.