இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

600 கி.மீ. மனித சங்கிலி எழுச்சியுடன் நடந்தது ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து ஆகும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு

6/24/2019 3:39:02 PM
வங்க கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது; டெல்டா மாவட்டங்கள் அருகே கரையை கடக்க வாய்ப்பு இஸ்ரேல், அமெரிக்கா, சவுதி தலைவர்கள் ரகசிய சந்திப்புக்கு இடையே ஈரான் அணுகுண்டு விஞ்ஞானி சுட்டுக் கொலை; மேற்கு ஆசியாவில் போர் மேக அச்சம்

சென்னை: தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் அழிவதோடு நிலத்தடி நீரும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி அதிமுக, பாஜ தவிர்த்து, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், டெல்டா மாவட்ட விவசாயிகள், வணிகர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி ராமேஸ்வரம் வரை 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு நேற்று மாலை மனித சங்கிலி நடந்தது. இதில் அதிமுக, பாஜ தவிர்த்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் பங்கேற்றனர்.

மரக்காணம் ஈ.சி.ஆர். சாலையில் தொடங்கிய போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை வகித்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், மாசிலாமணி, சீத்தாபதிசொக்கலிங்கம், விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கலந்துகொண்டனர். கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார். நாகப்பட்டினத்தில் எம்எல்ஏக்கள் மதிவாணன், தமிமுன் அன்சாரி கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை-கோவிலூர் பைபாஸ் கிழக்கு கடற்கரையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகித்தார்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பேரழிப்புக்கு எதிரான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமையில் மனித சங்கிலி நடந்தது. இதில் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் எம்பி, எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், நீலமேகம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
மனிதச் சங்கிலி நிறைவடையும் இடமான ராமேஸ்வரத்திலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் தலைவர் லெனின் இந்த போராட்டம் குறித்து கூறும்போது, மனித சங்கிலி எழுச்சியுடன் நடந்தது. மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வாபஸ் பெறும்வரை போராட்டம் நடைபெறும் என்றார்.

வைகோ ஆவேசம்: மரக்காணத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசுகையில், ‘‘இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆனால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும். இந்த திட்டம் அமைய உள்ள பகுதியில் 25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலங்கள் முற்றிலும் அழிந்து பாலைவனமாகும் நிலை உண்டாகும்’’ என்று ஆவேசமாக கூறினார்.

மேலும் சில
  • வங்க கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது; டெல்டா மாவட்டங்கள் அருகே கரையை கடக்க வாய்ப்பு



  • மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி பலி



  • தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்று காலை சவரனுக்கு ரூ.296 குறைவு



  • 3வது நாளாக மிதக்கிறது சென்னை புறநகர்



  • சென்னையில் மழை, புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை, வேளச்சேரியில் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்



  • செம்பரம்பாக்கம் ஏரியில் இரவு நேரத்தில் 9 ஆயிரம் கன அடி திறப்பு தண்ணீர் திறப்பால்: அடையாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீர்



  • கல்பாக்கத்தில் கரையை கடந்தது நிவர்; கிராமங்கள் துண்டிப்பு: 20 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின



  • திருமணத்திற்காக மதம் மாறினால் கலெக்டர் அனுமதி தேவை: உ.பி-யில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல்



  • தங்கம் விலை மீண்டும் சரிவு; சவரனுக்கு ரூ360 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி



  • விடிய விடிய பெய்யும் கனமழை வீடுகளில் முடங்கிய மக்கள்: நிவர் புயலால் 2வது நாளாக வெள்ளத்தில் மிதக்கும் சென்னை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]