இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

‘அழைப்பிதழில் பேர் இல்லை’ பரோலில் வந்த ஆயுள்கைதி மனைவியுடன் தற்கொலை

6/17/2019 3:19:00 PM
அரபிக் கடல் பகுதியில் விபத்தில் சிக்கியது மிக்-29 கே விமானம் மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி பலி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள விட்டலூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன்(38).  இவரது மனைவி சரஸ்வதி(33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சாமிநாதன் 2006ல் நடந்த  பலாத்கார வழக்கில்   கைது செய்யப்பட்டு  ஆயுள் தண்டனை பெற்றார். திருச்சி சிறையில்  தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் காரைக்காலில் உள்ள தனது அண்ணன்  வீட்டின் புது மனை புகுவிழாவுக்காக பரோலில் வந்தார். இன்று காலை அவர் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும். நேற்று புதுமனை புகுவிழாவுக்கு  குடும்பத்தோடு சென்றுவிட்டு  வந்தார். பின்னர் இரவில்  திருவாரூர் தெப்பத்திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்று விட்டு இரவு 10 மணிக்கு மேல் வீடு திரும்பினார்.

இந்த நிலையில்  இரு ஆண் குழந்தைகளும் தூங்கியபின் சாமிநாதனும், சரஸ்வதியும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.  இன்று காலை 7 மணியளவில் 2 குழந்தைகளும் விழித்துப்பார்த்த போது, தனது பெற்றோர் தூக்கில் தொங்கியதை பார்த்து கதறி அழுதனர். அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்துவிட்டு நன்னிலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து சடலங்களை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவகல்லூாி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோரை இழந்ததால் இரு குழந்தைகளும் அனாதையானது.

சாமிநாதன் திருச்சி சிறையில் இருந்தபோது படித்து பட்டம் பெற்றார். பின்னர் சிறையிலேயே கம்ப்யூட்டர் ஆபரேட்டர்  வேலையும் செய்து வந்தார்.
அண்ணன் வீட்டு புதுமனை புகுவிழா பத்திரிகையில்,  சாமிநாதன் பெயர் போடப்படவில்லையாம். சிறைக்கு சென்றதால் என் பெயரை போடவில்லையா என கேட்டாராம். இதனால் அண்ணனுக்கும், இவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விட்டலூர் இவரது வீட்டின் அருகே சாலை அகலப்படுத்தவதற்காக இவரது வீட்டையும் அகற்றும்படி அதிகாரிகள் கூறினார்களாம். இதனால் மனமுடைந்து இவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் சில
  • மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி பலி



  • தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்று காலை சவரனுக்கு ரூ.296 குறைவு



  • 3வது நாளாக மிதக்கிறது சென்னை புறநகர்



  • சென்னையில் மழை, புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை, வேளச்சேரியில் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்



  • செம்பரம்பாக்கம் ஏரியில் இரவு நேரத்தில் 9 ஆயிரம் கன அடி திறப்பு தண்ணீர் திறப்பால்: அடையாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீர்



  • கல்பாக்கத்தில் கரையை கடந்தது நிவர்; கிராமங்கள் துண்டிப்பு: 20 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின



  • திருமணத்திற்காக மதம் மாறினால் கலெக்டர் அனுமதி தேவை: உ.பி-யில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல்



  • தங்கம் விலை மீண்டும் சரிவு; சவரனுக்கு ரூ360 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி



  • விடிய விடிய பெய்யும் கனமழை வீடுகளில் முடங்கிய மக்கள்: நிவர் புயலால் 2வது நாளாக வெள்ளத்தில் மிதக்கும் சென்னை



  • 22 அடியை எட்டியதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கனஅடி தண்ணீர் திறப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]